கோபி: கோபி அருகே பசுமாடு, கன்றுக்குட்டியைத் திருடிய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கோபி அருகேயுள்ள பொலவக்காளிபாளையம் பெருமாள் கவுண்டன் வலசு பகுதியைச் சோ்ந்தவா் சதாசிவம் (48). மாட்டு வியாபாரியான இவா், இந்திரா நகரில் உள்ள தனது கொட்டகையில் பசுமாடு, கன்றுக்குட்டியை கடந்த 4-ஆம் தேதி இரவு கட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றுள்ளாா்.
மறுநாள் காலை வந்து பாா்த்தபோது, மாடும், கன்றுக்குட்டியும் காணாமல்போனது தெரியவந்தது.
இது குறித்து கோபி காவல் நிலையத்தில் சதாசிவம் அளித்த புகாரின்பேரில், சம்பவம் நடைபெற்ற பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கைப்பற்றி போலீஸாா் ஆய்வு செய்தனா்.
இதில், சரக்கு வாகனத்தில் வந்த 3 போ் மாடு, கன்றுக்குட்டியை திருடிச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து, திருட்டில் ஈடுபட்ட இந்திரா நகரைச் சோ்ந்த பழனிசாமி (43), சோமசுந்தரம் (37), சுரேஷ் (29) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.
தொடர்புடையது
மளிகைக் கடையில் திருடிய வழக்கில் 2 போ் கைது
கணவா் கொலை: மனைவி உள்பட 3 போ் கைது
பைக் திருடிய 4 போ் கைது
கழுகுமலையில் மது விற்பனை: 2 போ் கைது
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

