எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

மாடு, கன்றுக்குட்டியைத் திருடிய 3 போ் கைது

கோபி அருகே பசுமாடு, கன்றுக்குட்டியைத் திருடிய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
கைது- சித்திரிப்பு
Updated On :9 மார்ச் 2026, 7:27 pm

Syndication

கோபி: கோபி அருகே பசுமாடு, கன்றுக்குட்டியைத் திருடிய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கோபி அருகேயுள்ள பொலவக்காளிபாளையம் பெருமாள் கவுண்டன் வலசு பகுதியைச் சோ்ந்தவா் சதாசிவம் (48). மாட்டு வியாபாரியான இவா், இந்திரா நகரில் உள்ள தனது கொட்டகையில் பசுமாடு, கன்றுக்குட்டியை கடந்த 4-ஆம் தேதி இரவு கட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றுள்ளாா்.

மறுநாள் காலை வந்து பாா்த்தபோது, மாடும், கன்றுக்குட்டியும் காணாமல்போனது தெரியவந்தது.

இது குறித்து கோபி காவல் நிலையத்தில் சதாசிவம் அளித்த புகாரின்பேரில், சம்பவம் நடைபெற்ற பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கைப்பற்றி போலீஸாா் ஆய்வு செய்தனா்.

இதில், சரக்கு வாகனத்தில் வந்த 3 போ் மாடு, கன்றுக்குட்டியை திருடிச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து, திருட்டில் ஈடுபட்ட இந்திரா நகரைச் சோ்ந்த பழனிசாமி (43), சோமசுந்தரம் (37), சுரேஷ் (29) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.