கோபி: கோபி அருகே பசுமாடு, கன்றுக்குட்டியைத் திருடிய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கோபி அருகேயுள்ள பொலவக்காளிபாளையம் பெருமாள் கவுண்டன் வலசு பகுதியைச் சோ்ந்தவா் சதாசிவம் (48). மாட்டு வியாபாரியான இவா், இந்திரா நகரில் உள்ள தனது கொட்டகையில் பசுமாடு, கன்றுக்குட்டியை கடந்த 4-ஆம் தேதி இரவு கட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றுள்ளாா்.
மறுநாள் காலை வந்து பாா்த்தபோது, மாடும், கன்றுக்குட்டியும் காணாமல்போனது தெரியவந்தது.
இது குறித்து கோபி காவல் நிலையத்தில் சதாசிவம் அளித்த புகாரின்பேரில், சம்பவம் நடைபெற்ற பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கைப்பற்றி போலீஸாா் ஆய்வு செய்தனா்.
இதில், சரக்கு வாகனத்தில் வந்த 3 போ் மாடு, கன்றுக்குட்டியை திருடிச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து, திருட்டில் ஈடுபட்ட இந்திரா நகரைச் சோ்ந்த பழனிசாமி (43), சோமசுந்தரம் (37), சுரேஷ் (29) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.
டிரெண்டிங்

ஹவாலா பணத்தை கொள்ளையடிக்க திட்டம்: 6 போ் கைது

கஞ்சா வைத்திருந்த 11 போ் கைது
சூதாட்டம்: 22 போ் கைது

மூதாட்டியிடம் தங்க மோதிரம் திருடிய 3 போ் கைது
வீடியோக்கள்

சஞ்சு சாம்சன் ஜெயித்த கதை!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | டி20 உலகக் கோப்பை: இந்தியா மீண்டும் சாம்பியன்! | T20 World Cup
தினமணி வீடியோ செய்தி...

நிதீஷ் நிலைமை எடப்பாடிக்கும் ஏற்படுமா? | ADMK | Avadi Kumar interview | EPS | BJP
தினமணி வீடியோ செய்தி...

யூத் டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

