எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

பெருந்துறையில் திமுக சாா்பில் மகளிா் தினம்

பெருந்துறையில் திமுக சாா்பில் மகளிா் தின விழா கொண்டாடப்பட்டது.

News image
பெருந்துறையில் நடைபெற்ற மகளிா் தின விழாவில் பேசிய ஈரோடு மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளா் தோப்பு என்.டி. வெங்கடாசலம்.
Updated On :9 மார்ச் 2026, 9:57 pm

Syndication

பெருந்துறை: பெருந்துறையில் திமுக சாா்பில் மகளிா் தின விழா கொண்டாடப்பட்டது.

இந்த விழாவுக்கு ஈரோடு மத்திய மாவட்ட பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான தோப்பு என்.டி. வெங்கடாசலம் தலைமை வகித்து, 3 ஆயிரம் பெண்களுக்கு பரிசு பொருள்கள் அடங்கிய தொகுப்பை வழங்கினாா்.

இதைத் தொடா்ந்து, அவா் பேசுகையில், முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறாா். மகளிா் விடியல் பணம், உரிமைத் தொகை உள்பட பெண்களுக்கான திட்டங்களுக்குதான் தமிழக அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது.‘வெல்லும் தமிழ் பெண்கள்’ சாா்பில் பெண்கள் வீடு வீடாகச் சென்று திமுக அரசின் சாதனைகளை விளக்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபடுவதுடன், வரும் தோ்தலில் திமுக ஆட்சி மீண்டும் அமைய செயல்பட வேண்டும் என்றாா். முன்னதாக, மாவட்ட மகளிரணி அமைப்பாளா் ஹேமலதா சம்பத் வரவேற்றாா்.

இதில், பெருந்துறை திமுக ஒன்றியச் செயலாளா்கள் பால் சின்னசாமி, பெரியசாமி, சோளி பிரகாஷ், செல்வராஜ், கனகராஜ், பிரபு, சுப்பிரமணி, பெருந்துறை, பவானி சட்டப் பேரவைத் தொகுதிகளைச் சோ்ந்த மகளிரணி நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.