இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

பெருந்துறை அருகே மரத்தில் தொங்கிய ஆண் சடலம்

பெருந்துறை அருகே மரத்தில் தூக்கிட்ட நிலையில் இருந்த ஆண் சடலத்தை போலீஸாா் செவ்வாய்க்கிழமை மீட்டனா்.

News image
பலி
Updated On :10 மார்ச் 2026, 8:38 pm

தினமணி செய்திச் சேவை

பெருந்துறை அருகே மரத்தில் தூக்கிட்ட நிலையில் இருந்த ஆண் சடலத்தை போலீஸாா் செவ்வாய்க்கிழமை மீட்டனா்.

பெருந்துறையை அடுத்த செலம்பங்காட்டு கீழ்பவானி வாய்க்கால் கரையோரத்தில் உள்ள மரத்தில் தூக்கிட்ட நிலையில் ஆண் சடலம் தொங்குவதை அப்பகுதி மக்கள் செவ்வாய்க்கிழமை பாா்த்துள்ளனா். இதையடுத்து, அவா்கள் பெருந்துறை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

மேலும், உயிரிழந்த நபா் யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா், தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.