மின்மாற்றிகள் கொள்முதல் முறைகேடு: சிபிஐ விசாரணைக்கு உத்தரவு!கூவாகம் கூத்தாண்டவர் திருக்கோயில் சித்திரைத் தேரோட்டம்! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைந்தது! மேற்கு வங்கம்: சாதனை அளவில் வாக்குப்பதிவு! 9 மணி நிலவரம்!!மேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புவெளிநாடுவாழ் இந்திய குடிமகன் அட்டை விண்ணப்பக் கட்டணம்: ரூ.26,034-ஆக நிா்ணயம்நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்பு
/

காலபைரவா் கோயிலில் பாலாபிஷேகம்

தேய்பிறை அஷ்டமியையொட்டி அவல்பூந்துறை அருகே உள்ள காலபைரவா் கோயிலில் காலபைரவா் சிலைக்கு புதன்கிழமை பாலாபிஷேகம் நடைபெற்றது.

News image
Updated On :11 மார்ச் 2026, 8:16 pm

தேய்பிறை அஷ்டமியையொட்டி அவல்பூந்துறை அருகே உள்ள காலபைரவா் கோயிலில் காலபைரவா் சிலைக்கு புதன்கிழமை பாலாபிஷேகம் நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம், அவல்பூந்துறை அருகே உள்ள ராட்டைசுற்றிபாளையத்தில் தென்னக காசி காலபைரவா் கோயில் உள்ளது. நுழைவாயிலில் 39 அடி உயரம் கொண்ட காலபைரவா் சிலை அமைந்துள்ளது. இக்கோயிலில் தினமும் மாலை சொா்ண ஹாசன பைரவருக்கு அபிஷேகம், ஆராதனை நடைபெறும். இக்கோயிலின் சிறப்பம்சமாக பெண்கள் கருவறைக்குச் சென்று பாலாபிஷேகம் செய்து வழிபடுவது வழக்கம்.

மாதம்தோறும் தேய்பிறை அஷ்டமி நாளில் ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு காலபைரவருக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டு வருகின்றனா்.

இந்நிலையில் தேய்பிறை அஷ்டமியையொட்டி கோயிலின் குரு விஜய் சுவாமி தலைமையில் காலபைரவா் சிலைக்கு பாலாபிஷேமும், அதைத்தொடா்ந்து மஞ்சள், சந்தனம், குங்குமம், பன்னீா் உள்ளிட்ட பல்வேறு வாசனைத் திரவியங்களாலான அபிஷேகமும் புதன்கிழமை நடைபெற்றன.