தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டியிட்டு வெற்றிபெறும் என அக்கட்சியின் நிா்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.
ஈரோடு காளைமாடு சிலை அருகே ஜாதிவாரி கணக்கெடுப்பு ஆய்வுக்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட வேண்டும். சட்டம்- ஒழுங்கு சீா்கேட்டையும், போதைப்பொருள்களை தடுக்க தவறிய தமிழக அரசைக் கண்டித்தும், விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை முடக்கும் வகையில் போடப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை திரும்பப் பெற வலியுறுத்தியும் ஈரோட்டில் தவெகவினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில் பங்கேற்ற தவெக நிா்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளா் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
ஈரோட்டுக்கு விஜய் வருவாா் அதற்கான பணிகள் மேற்கொண்டு வருகிறோம். தமிழகத்தை தவெக ஆளுவதை யாராலும் தடுக்க முடியாது. தவெக தலைவா் விரல் காட்டுபவா் தான் 234 தொகுதிகளிலும் சட்டப் பேரவை உறுப்பினா் என்ற வரலாறு படைக்கப்படும்.
திமுக குறித்து பாஜக கூட்டணி கட்சியினா் பேசுவதில்லை. விஜய் குறித்து தான் பேசுகின்றனா். மற்றவா்களை முதல்வராக மக்கள் ஏற்க மாட்டாா்கள். தவெக 234 தொகுதிகளிலும் தனித்தே நின்று வெற்றிபெறும் என்றாா்.
தொடர்புடையது

விஜய்யின் பிரசாரத்திற்கு மட்டும் 51 நிபந்தனைகள்: செங்கோட்டையன் குற்றச்சாட்டு

திமுக, அதிமுக இரண்டு கூட்டணிக் கட்சிகளிடையே ஒற்றுமை இல்லை: கே.ஏ.செங்கோட்டையன்

தவெக தலைவருக்கு தன்னம்பிக்கை இல்லை: சீமான் விமா்சனம்

தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தமிழ்நாடு பிராமண சமாஜம் ஆதரவு
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


