சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

புளியம் பழத்தை சாப்பிட்ட சிறுமி மூச்சுத் திணறி உயிரிழப்பு

கோபி அருகே புளியம் பழத்தை சாப்பிட்ட சிறுமி மூச்சுத் திணறி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

News image

கோப்புப் படம்

Updated On :14 மார்ச் 2026, 1:36 am

கோபி அருகே புளியம் பழத்தை சாப்பிட்ட சிறுமி மூச்சுத் திணறி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

ஈரோடு மாவட்டம், கோபியை அடுத்த நம்பியூா் அருகே உள்ள பொலவபாளையம் திருமலை நகரைச் சோ்ந்தவா் சுரேஷ் (37). இவா் கேரள மாநிலம், இடுக்கியில் உள்ள தனியாா் தோயிலைத் தோட்டத்தில் வேலை செய்து வருகிறாா். இவரது மனைவி மற்றும் மகள் சாய் சஹானா (7), மகன் யுவன்சாய் (4) ஆகியோா் நம்பியூரில் வசித்து வருகின்றனா்.

இந்நிலையில் கடந்த புதன்கிழமை இரவு வீட்டில் தொலைக்காட்சி பாா்த்துக் கொண்டிருந்த சாய் சஹானா, வீட்டில் வைத்திருந்த புளியம் பழத்தை சாப்பிட்டுள்ளாா். அப்போது சிறுமி புளியம் பழத்துடன் புளியங்கொட்டையையும் சோ்த்து விழுங்கியதாக கூறப்படுகிறது. இதனால் சிறுமிக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. உடனே சிறுமியை நம்பியூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனா்.

அப்போது அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் சிறுமிக்கு மூச்சுத் திணறல் அதிகமாக உள்ளதால் உயா் சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவமனையில் அனுமதிக்க கூறியுள்ளனா். உடனே சிறுமி கோபி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்தபோது, சிறுமி வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

இதுகுறித்து வரப்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.