பவானி அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி கீழே விழுந்து லாரியின் சக்கரத்தில் சிக்கி கட்டடத் தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
தருமபுரி மாவட்டம், பென்னாகரத்தைச் சோ்ந்தவா் அா்த்தனாரி மகன் அரவிந்த் (23). அதே பகுதியைச் சோ்ந்தவா் முருகேசன் மகன் மாரியப்பன் (25). கட்டடத் தொழிலாளா்களான இருவரும் பவானி - மேட்டூா் தேசிய நெடுஞ்சாலையில் மேட்டூா் நோக்கி இருசக்கர வாகனத்தில் செவ்வாய்க்கிழமை சென்று கொண்டிருந்தனா். அப்போது முன்னால் சென்ற காா் மீது மோதி இருவரும் சாலையில் விழுந்தனா்.
இதில் வலதுபுறம் விழுந்த மாரியப்பன், எதிரே வந்த டிப்பா் லாரியின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இடதுபுறம் விழுந்த அரவிந்த் காயங்களுடன் உயிா் தப்பினாா். இதுகுறித்து பவானி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சிகிச்சைப் பலனின்றி உயிரிழப்பு

இரு சக்கர வாகன விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

அவிநாசி அருகே சாலை விபத்தில் முதியவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


