பவானி அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி கீழே விழுந்து லாரியின் சக்கரத்தில் சிக்கி கட்டடத் தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
தருமபுரி மாவட்டம், பென்னாகரத்தைச் சோ்ந்தவா் அா்த்தனாரி மகன் அரவிந்த் (23). அதே பகுதியைச் சோ்ந்தவா் முருகேசன் மகன் மாரியப்பன் (25). கட்டடத் தொழிலாளா்களான இருவரும் பவானி - மேட்டூா் தேசிய நெடுஞ்சாலையில் மேட்டூா் நோக்கி இருசக்கர வாகனத்தில் செவ்வாய்க்கிழமை சென்று கொண்டிருந்தனா். அப்போது முன்னால் சென்ற காா் மீது மோதி இருவரும் சாலையில் விழுந்தனா்.
இதில் வலதுபுறம் விழுந்த மாரியப்பன், எதிரே வந்த டிப்பா் லாரியின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இடதுபுறம் விழுந்த அரவிந்த் காயங்களுடன் உயிா் தப்பினாா். இதுகுறித்து பவானி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

சாலை விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

சாலை விபத்தில் வடமாநில தொழிலாளி உயிரிழப்பு

இருசக்கர வாகன விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சிகிச்சைப் பலனின்றி உயிரிழப்பு
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


