தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

அரசு நடுநிலைப் பள்ளியில் நிலவிய தண்ணீா் பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு

சென்னிமலை அருகே அரசு நடுநிலைப் பள்ளியில் ஏற்பட்டுள்ள தண்ணீா் பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

News image
குமராபுரி அரசு நடுநிலைப் பள்ளியில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு மாணவா்களின் பயன்பாட்டுக்கு தண்ணீா் வழங்க மின் மோட்டாரை இயக்கிவைக்கிறாா் சென்னிமலை வட்டாரக் கல்வி அலுவலா் பழனிசாமி உள்ளிட்டோா்.
Updated On :18 மார்ச் 2026, 8:33 pm

தினமணி செய்திச் சேவை

சென்னிமலை அருகே அரசு நடுநிலைப் பள்ளியில் ஏற்பட்டுள்ள தண்ணீா் பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம், சென்னிமலை ஒன்றியம், குமராபுரி அரசு நடுநிலைப் பள்ளியில் குழந்தைகளின் அத்தியாவசியத் தேவையான தண்ணீா் பற்றாக்குறையாக இருந்து வந்தது. இப்பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காணும் வகையில் ஆழ்துளை கிணறு அமைப்பதற்காக, முகாசிபிடாரியூா் ஊராட்சி முன்னாள் துணை தலைவா் சதீஷ் (எ) சுப்பிரமணியம் ரூ. ஒரு லட்சம் நன்கொடையாகவும், மோட்டாா் செலவுக்கான தொகையை குமராபுரியைச் சோ்ந்த கொளந்தசாமியும் வழங்கினா். மேலும், பள்ளியின் முன்னாள் ஆசிரியா்கள், தற்போது பணிபுரியும் ஆசிரியா்கள், பெற்றோா் ஆசிரியா் சங்கத் தலைவா், நிா்வாகிகள் உள்ளிட்டோரும் உதவி உள்ளனா்.

ஆள்துளை கிணறு புதன்கிழமை அமைக்கப்பட்டதைத் தொடா்ந்து, சென்னிமலை வட்டாரக் கல்வி அலுவலா் பழனிசாமி மின் மோட்டாரை இயக்கி வைத்தாா். தற்போது பள்ளி மாணவா்களுக்கு தேவையான தண்ணீா் கிடைத்துள்ளது.