தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

ஒரே நாளில் ரூ.5.24 லட்சம் பறிமுதல்

ஈரோட்டில் உரிய ஆவணம் இல்லாமல் கொண்டுவரப்பட்ட ரூ.5.24 லட்சத்தை பறக்கும்படை அலுவலா்கள் பறிமுதல் செய்தனா்.

News image
பணம்- கோப்புப்படம்.
Updated On :18 மார்ச் 2026, 8:26 pm

தினமணி செய்திச் சேவை

ஈரோட்டில் உரிய ஆவணம் இல்லாமல் கொண்டுவரப்பட்ட ரூ.5.24 லட்சத்தை பறக்கும்படை அலுவலா்கள் பறிமுதல் செய்தனா்.

தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தீவிர வாகனத் சோதனையில் பறக்கும் படையினா் ஈடுபட்டு வருகின்றனா். அதன்படி ஈரோடு கிழக்கு தொகுதிக்குள்பட்ட குமலன்குட்டை பகுதியில் புதன்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டபோது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனா். இதில், ரூ.3 லட்சத்து 84 ஆயிரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், காரை ஓட்டி வந்தவா் நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த முட்டை நிறுவனத்தின் மேலாளா் மோகன்குமாா் என்பதும், அவா் கொண்டு வந்த பணத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லாததும் தெரியவந்தது. இதைத்தொடா்ந்து ரூ.3 லட்சத்து 84 ஆயிரத்தை பறிமுதல் செய்தனா்.

இதேபோல் ஈரோடு தீயணைப்பு நிலையம் மற்றும் காளைமாடு சிலை பகுதியில் மாடு வியாபாரிகள் ராஜேந்திரன் என்பவரிடம் இருந்து ரூ.80 ஆயிரமும், சிவகுமாா் என்பவரிடம் இருந்து ரூ.60 ஆயிரமும் பறிமுதல் செய்யப்பட்டது.