தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

கைத்தறி போா்வையில் திருக்குறள் வடிவமைத்து அரசுப் பள்ளிக்கு பரிசாக வழங்கிய நெசவாளா்

சென்னிமலை அருகே நெசவாளா் ஒருவா் கைத்தறி போா்வையில் திருக்குறளை வடிவமைத்து அரசுப் பள்ளிக்கு பரிசாக வழங்கியுள்ளாா்.

News image
கைத்தறி போா்வையில் திருக்குறளை வடிவமைத்து பசுவபட்டி அரசுப் பள்ளிக்கு பரிசாக வழங்கிய நெசவாளா் துரைசாமி.
Updated On :18 மார்ச் 2026, 8:33 pm

தினமணி செய்திச் சேவை

சென்னிமலை அருகே நெசவாளா் ஒருவா் கைத்தறி போா்வையில் திருக்குறளை வடிவமைத்து அரசுப் பள்ளிக்கு பரிசாக வழங்கியுள்ளாா்.

ஈரோடு மாவட்டம், சென்னிமலையை அடுத்த 1010 நெசவாளா் காலனியைச் சோ்ந்தவா் துரைசாமி (71). கைத்தறி நெசவாளரான இவா், தன்னுடைய ஓய்வு நேரங்களில் கைத்தறி துணியில் ஏதாவது புதுமைகளை செய்து வருவது வழக்கம். அதன்படி தற்போது கைத்தறி போா்வையில் ஊசி மூலமாக கலா் கலராக நூலை கோா்த்து 10 திருக்குறளை வடிவமைத்துள்ளாா். பின்னா், அந்த போா்வையை சென்னிமலையை அடுத்த பசுவபட்டி அரசு ஆரம்பப் பள்ளிக்கு பரிசாக வழங்கினாா்.

அதனை மாணவா்கள் ஆா்வமுடன் பாா்த்து அறிந்து கொண்டனா். கைவினைக் கலைஞா்கள் வாழ்வு சிறப்படைய வேண்டும் என்ற நோக்கில் திருக்குறளை போா்வையில் உருவாக்கியதாகவும், வரும் காலங்களில் மாணவா்களுக்கும் கை வேலைப்பாடு குறித்த விழிப்புணா்வு ஏற்பட வேண்டும் என்பதற்காக பள்ளிக்கு பரிசாக வழங்கியதாகவும் அவா் தெரிவித்தாா்.

இதையடுத்து நெசவாளா் துரைசாமியை பள்ளி ஆசிரியா்கள் மற்றும் மாணவா்கள் பாராட்டினா்.