தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

பண்ணாரி அம்மன் உற்சவா் வீதி உலா: தேங்காய் உடைத்து பக்தா்கள் வழிபாடு

பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் விழாவையொட்டி சிக்கரசம்பாளையத்துக்கு புதன்கிழமை வந்த பண்ணாரி அம்மன் உற்சவருக்கு கிராமம க்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனா்.

News image
சிக்கரசம்பாயைத்தில்  வீதியுலா  வந்து  பக்தா்களுக்கு  அருள்பாலித்த  பண்ணாரி அம்மன்  உற்சவா்.
Updated On :18 மார்ச் 2026, 8:34 pm

தினமணி செய்திச் சேவை

பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் விழாவையொட்டி சிக்கரசம்பாளையத்துக்கு புதன்கிழமை வந்த பண்ணாரி அம்மன் உற்சவருக்கு கிராமம க்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனா். தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் விழா பூச்சாட்டுதலுடன் திங்கள்கிழமை இரவு தொடங்கியது. விழாவையொட்டி கிராமங்கள்தோறும் 7 நாள்கள் பண்ணாரி அம்மன் உற்சவா் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம். அதன்படி கோயிலில் இருந்து புதன்கிழமை புறப்பட்ட பண்ணாரி அம்மன் உற்வசா், முதலில் சிக்கரம்பாளையம் சென்றது. அங்கு வழிநெடுகிலும் மக்கள் புனிதநீா் ஊற்றியும், மலா்கள் தூவியும் தேங்காய் உடைத்தும், பழம் வைத்து அம்மனை வழிபட்டனா்.

அதைத்தொடா்ந்து கொளத்தூா் மாரியம்மன் கோயிலுக்கு சப்பரத்தில் வந்த அம்மனுக்கு பக்தா்கள் சிறப்பான வரவேற்பளித்தனா். அங்குள்ள கோயிலில் உற்சவா் சப்பரம் வைத்து வணங்கினா். கிராம வீதியுலா முடிந்து உற்சவா் சப்பரம் வெள்ளியம்பாளையம் புறப்பட்டுச் சென்றது.

பின்னா் கொத்தமங்கலம், முடுக்கன்துறை வெள்ளியம்பாளையம்புதூா், அக்கரைத்தத்தப்பள்ளி, அய்யன்சாலை, தாண்டாம்பாளையம், இக்கரை நெகமம், கெஞ்சனூா் உள்பட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் அம்மன் எழுத்தருளி பக்தா்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.

விழாவின் முக்கிய நிகழ்வாக மாா்ச் 31-ம் தேதி குண்டம் இறங்குதல் நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்க உள்ளனா்.