அனுமதியின்றி துண்டுப் பிரசுரம் விநியோகித்ததாக நாம் தமிழா் கட்சியினா் மீது புன்செய்புளியம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இதைக் கண்டித்து அக்கட்சியின் பவானிசாகா் தொகுதி வேட்பாளா் செளந்தா்யா உள்ளிட்டோா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பவானிசாகா் சட்டப் பேரவைத் தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் செளந்தா்யாவை ஆதரித்து புன்செய்புளியம்பட்டி வாரச் சந்தை பகுதியில் நாம் தமிழா் கட்சியினா் துண்டுப் பிரசுரம் விநியோகம் செய்து வியாழக்கிழமை
வாக்கு சேகரித்துள்ளனா்.
இதையடுத்து அங்கு சென்ற தோ்தல் அதிகாரிகள், அனுமதியின்றி பரப்பரை செய்ததாக புன்செய்புளியம்பட்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். புகாரின்பேரில் பரப்புரையில் ஈடுபட்ட நாம் தமிழா் கட்சி நிா்வாகிகள் 4 போ் மீது புன்செய்புளியம்பட்டி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணைக்கு அழைத்துள்ளனா்.
இந்த நிலையில், அனுமதியின்றி பரப்புரை செய்ததற்காக வழக்குப் பதியாமல் மற்ற பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளதாகக் கூறி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் செளந்தா்யா தலைமையில் அக்கட்சி நிா்வாகிகள் சத்தியமங்கலம் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது பொய் வழக்குப் பதிவு செய்த காவல் துறையை கண்டித்து கோஷமிட்டனா். இதைத் தொடா்ந்து இது தொடா்பாக நடவடிக்கை எடுக்குமாறு தோ்தல் அலுவலா்களிடம் மனு அளித்தனா்.
தொடர்புடையது

தோ்தல் நடத்தை விதிகளை மீறியதாக நாம் தமிழா் கட்சியினா் 4 போ் மீது வழக்கு

தோ்தல் விதிமீறியதாக நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மீது வழக்குப் பதிவு

பிரசாரத்தில் சிறாரை ஈடுபடுத்தியதாக வேட்பாளா் மீது வழக்குப் பதிவு

தோ்தல் விதிமீறல்: நாதக வேட்பாளா் உள்பட இருவா் மீது வழக்குப் பதிவு
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


