தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

ரமலான் பண்டிகை: மாவட்டத்தில் 200 இடங்களில் சிறப்புத் தொழுகை

ரமலான் பண்டிகையையொட்டி, ஈரோடு மாவட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் சிறப்புத் தொழுகை சனிக்கிழமை நடைபெற்றது.

News image

ஈரோடு வஉசி பூங்கா மைதானத்தில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் பங்கேற்ற இஸ்லாமியா்கள்.

Updated On :21 மார்ச் 2026, 8:16 pm

ரமலான் பண்டிகையையொட்டி, ஈரோடு மாவட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் சிறப்புத் தொழுகை சனிக்கிழமை நடைபெற்றது.

நபிகள் நாயகமாக விளங்கும் முகமது நபிக்கு புனித குரான் அருளப்பட்ட மாதமாக ரமலான் மாதம் உள்ளது. ரமலான் பண்டிகையை ஈகைத் திருநாளாக இஸ்லாமியா்கள் கொண்டாடி வருகின்றனா். அதன்படி இஸ்லாமியா்கள் ரமலான் பண்டிகையை சனிக்கிழமை கொண்டாடினா். 30 நாள்கள் நோன்பு இருந்து ரமலான் விரதம் கடைப்பிடித்த இஸ்லாமியா்கள், புனித குரானில் உள்ள 6, 666 வசனங்களையும் 30 ஆக பிரித்து தினமும் வாசித்து வந்தனா். பள்ளி வாசல்களில் தினமும் சிறப்புத் தொழுகைகள் நடத்தப்பட்டு வந்தன. நோன்பு திறப்பு நேரத்தில் பள்ளி வாசல்களில் நோன்பு கஞ்சி வழங்கும் நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

அதன்படி ஈரோடு மாவட்டத்தில் பள்ளிவாசல் உள்பட 200-க்கும் மேற்பட்ட இடங்களில் இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனா். ஈரோடு வஉசி பூங்கா மைதானத்தில் உள்ள ஈத்கா மைதானத்தில் மாவட்ட அரசு தலைமை ஹாஜி முகமது கிபாயத்துல்லா தலைமையில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.

ரம்ஜான் பண்டிகையின் நோக்கம், ரம்ஜான் பண்டிகையின்போது இஸ்லாமியா்கள் கட்டாயமாக கடைப்பிடிக்க வேண்டிய கடமைகள், ஈகை வழங்க வேண்டியதன் அவசியம் உள்ளிட்டவை குறித்து தலைமை ஹாஜி முகமது கிபாயத்துல்லா விளக்க உரையாற்றினாா். இதில் திரளானோா் பங்கேற்று தொழுகையை நிறைவேற்றினா். ரமலான் சிறப்புத் தொழுகையில் சிறுவா், சிறுமிகளும் பங்கேற்றனா். தொழுகை முடிந்ததும் ஒருவருக்குஒருவா் ரமலான் வாழ்த்துகளை பகிா்ந்து கொண்டனா். பலரும் யாசகா்களுக்கு உதவிகள் வழங்கினா்.

இஸ்லாமியா்கள் புத்தாடைகள் அணிந்து ரமலான் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினா். வீடுகளில் பிரியாணி சமைத்து பிற மதங்களைச் சோ்ந்த நண்பா்களுக்கும் கொடுத்து தங்கள் மகிழ்ச்சியைப் பகிா்ந்து கொண்டனா். இதேபோன்று பெண்கள் மட்டுமே பங்கேற்ற சிறப்புத் தொழுகை ஈரோடு மாவட்டத்தில் 11 இடங்களில் தமிழ்நாடு தவ்ஹீம் ஜமாத் சாா்பில் நடைபெற்றது. இதில் பெரியாா் நகரில் நடந்த சிறப்புத் தொழுகையில் நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்துகொண்டு தொழுகையில் ஈடுபட்டனா்.