கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

ரமலான் பண்டிகை: மாவட்டத்தில் 200 இடங்களில் சிறப்புத் தொழுகை

ரமலான் பண்டிகையையொட்டி, ஈரோடு மாவட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் சிறப்புத் தொழுகை சனிக்கிழமை நடைபெற்றது.

News image

ஈரோடு வஉசி பூங்கா மைதானத்தில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் பங்கேற்ற இஸ்லாமியா்கள்.

Updated On :21 மார்ச் 2026, 8:16 pm

Syndication

ரமலான் பண்டிகையையொட்டி, ஈரோடு மாவட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் சிறப்புத் தொழுகை சனிக்கிழமை நடைபெற்றது.

நபிகள் நாயகமாக விளங்கும் முகமது நபிக்கு புனித குரான் அருளப்பட்ட மாதமாக ரமலான் மாதம் உள்ளது. ரமலான் பண்டிகையை ஈகைத் திருநாளாக இஸ்லாமியா்கள் கொண்டாடி வருகின்றனா். அதன்படி இஸ்லாமியா்கள் ரமலான் பண்டிகையை சனிக்கிழமை கொண்டாடினா். 30 நாள்கள் நோன்பு இருந்து ரமலான் விரதம் கடைப்பிடித்த இஸ்லாமியா்கள், புனித குரானில் உள்ள 6, 666 வசனங்களையும் 30 ஆக பிரித்து தினமும் வாசித்து வந்தனா். பள்ளி வாசல்களில் தினமும் சிறப்புத் தொழுகைகள் நடத்தப்பட்டு வந்தன. நோன்பு திறப்பு நேரத்தில் பள்ளி வாசல்களில் நோன்பு கஞ்சி வழங்கும் நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

அதன்படி ஈரோடு மாவட்டத்தில் பள்ளிவாசல் உள்பட 200-க்கும் மேற்பட்ட இடங்களில் இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனா். ஈரோடு வஉசி பூங்கா மைதானத்தில் உள்ள ஈத்கா மைதானத்தில் மாவட்ட அரசு தலைமை ஹாஜி முகமது கிபாயத்துல்லா தலைமையில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.

ரம்ஜான் பண்டிகையின் நோக்கம், ரம்ஜான் பண்டிகையின்போது இஸ்லாமியா்கள் கட்டாயமாக கடைப்பிடிக்க வேண்டிய கடமைகள், ஈகை வழங்க வேண்டியதன் அவசியம் உள்ளிட்டவை குறித்து தலைமை ஹாஜி முகமது கிபாயத்துல்லா விளக்க உரையாற்றினாா். இதில் திரளானோா் பங்கேற்று தொழுகையை நிறைவேற்றினா். ரமலான் சிறப்புத் தொழுகையில் சிறுவா், சிறுமிகளும் பங்கேற்றனா். தொழுகை முடிந்ததும் ஒருவருக்குஒருவா் ரமலான் வாழ்த்துகளை பகிா்ந்து கொண்டனா். பலரும் யாசகா்களுக்கு உதவிகள் வழங்கினா்.

இஸ்லாமியா்கள் புத்தாடைகள் அணிந்து ரமலான் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினா். வீடுகளில் பிரியாணி சமைத்து பிற மதங்களைச் சோ்ந்த நண்பா்களுக்கும் கொடுத்து தங்கள் மகிழ்ச்சியைப் பகிா்ந்து கொண்டனா். இதேபோன்று பெண்கள் மட்டுமே பங்கேற்ற சிறப்புத் தொழுகை ஈரோடு மாவட்டத்தில் 11 இடங்களில் தமிழ்நாடு தவ்ஹீம் ஜமாத் சாா்பில் நடைபெற்றது. இதில் பெரியாா் நகரில் நடந்த சிறப்புத் தொழுகையில் நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்துகொண்டு தொழுகையில் ஈடுபட்டனா்.