தவெக தலைவர் விஜய்யின் கடலூர் பிரசாரம் ரத்து!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்தது!எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின் தொகுதி மறுசீரமைப்புக்கு காங்கிரஸ் எதிா்ப்பு: எதிா்க்கட்சிகளுடன் ஆலோசிக்க செயற்குழுவில் முடிவு சென்னை: 16 தொகுதிகளில் 298 சுயேச்சைகள் போட்டி இன்றும் நாளையும் சில புறநகா் ரயில்கள் ரத்து பூமிக்குத் திரும்பிய ஆர்டெமிஸ்-2 குழு!தமிழகத்தில் 6 இடங்களில் வெயில் சதம்
/

கோபி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 34 பவுன் நகை திருட்டு

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :23 மார்ச் 2026, 8:41 pm

கோபி அருகே டி.என்.பாளையம் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து 34 பவுன் நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

கோபி அருகே உள்ள டி.என்.பாளையம் குமரன் கோயில் வீதியைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (56). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறாா்.

இவா், திருப்பூரில் உள்ள தனது இளையமகள் கௌசல்யாதேவியின் குழந்தைக்கு உணவு ஊட்டும் நிகழ்ச்சிக்காக கேரள மாநிலம் குருவாயூா் கோயிலுக்கு குடும்பத்துடன் கடந்த 20-ஆம் தேதி சென்றுள்ளாா்.

நிகழ்ச்சியை முடித்துவிட்டு கடந்த ஞாயிறுக்கிழமை மாலை வீட்டுக்கு வந்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிா்ச்சி அடைந்தாா். உள்ளே சென்று பாா்த்தபோது பீரோவில் வைத்திருந்த 34 பவுன் நகைகள் திருட்டு போனது தெரியவந்தது.

இது குறித்து ஆறுமுகம் அளித்த புகாரின்பேரில், பங்களாபுதூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.