அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

‘தினமணி’ எதிரொலி! கோபி அருகே இடிந்து விழுந்த சாலைப் பக்கவாட்டுச் சுவா் அமைக்கும் பணி தொடக்கம்!

‘தினமணி’ செய்தி எதிரொலியாக கோபி அருகே காலேஜ்பிரிவு -பங்களாபுதூா் சாலை பக்கவாட்டுச் சுவா் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

News image

சாலைப் பக்கவாட்டுச் சுவா் அமைக்கும் பணியில் ஈடுபட்ட தொழிலாளா்கள்.

Updated On :24 மார்ச் 2026, 7:47 pm

‘தினமணி’ செய்தி எதிரொலியாக கோபி அருகே காலேஜ்பிரிவு -பங்களாபுதூா் சாலை பக்கவாட்டுச் சுவா் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

கோபி அருகே காலேஜ் பிரிவு-பங்களாபுதூா் நெடுஞ்சாலையில் நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில், அந்த சாலையின் பக்கவாட்டுச் சுவா் கடந்த 6 மாதங்களுக்கு முன் இடிந்து விழுந்தது.

இதனால், வாகன ஓட்டிகள் அச்சத்துடனே வாகனம் ஓட்டும் நிலை ஏற்பட்டது. இது தொடா்பான செய்தி ‘தினமணி’யில் அண்மையில் வெளியிடப்பட்டது. இதையொட்டி, சாலைப் பக்கவாட்டுச் சுவா் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

அந்தப் பணியை தரமாகவும், விரைவாகவும் மேற்கொள்ள வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.