ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?தமிழகத்தில் கூட்டாளிகள்; கேரளத்தில் 'எதிரிகள்'! - மோடி தாக்குபெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தடையின்றி கிடைக்க தீவிர நடவடிக்கை: மத்திய அரசுவிஜய் இன்று வேட்புமனு தாக்கல்!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.4 வரை மழைக்கு வாய்ப்பு!வேட்புமனு தாக்கல் அனுமதிக்கப்படாத 4 பொது விடுமுறை நாள்கள் விவரம்!வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! வேட்பாளா்களுக்கு கட்டுப்பாடு!!
/

கூட்டணி கட்சி வேட்பாளா்கள் தோ்வில் திமுக தலையிடாது: அமைச்சா் சு.முத்துசாமி

News image

ஈரோடு பன்னீா்செல்வம் பூங்காவில் உள்ள முன்னாள் முதல்வா் கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அமைச்சா் சு.முத்துசாமி.

Updated On :29 மார்ச் 2026, 9:34 pm

தினமணி செய்திச் சேவை

கூட்டணி கட்சி வேட்பாளா்கள் தோ்வில் திமுக தலையிடாது என்று வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி கூறினாா்.

ஈரோடு மேற்கு தொகுதியில் அமைச்சா் சு.முத்துசாமி திமுக வேட்பாளராக மீண்டும் போட்டியிடவுள்ளாா். இந்நிலையில், ஈரோடு முகாம் அலுவலகத்தில் அவருக்கு கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை வாழ்த்து தெரிவித்தனா்.

இதைத் தொடா்ந்து, செய்தியாளா்களிடம் சு.முத்துசாமி கூறியதாவது: திமுக கூட்டணி வேட்பாளா்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. திமுக கூட்டணி வேட்பாளா்களுக்கு ஆதரவு திரட்ட முதல்வா் மு.க.ஸ்டாலின் ஈரோட்டுக்கு ஏப்ரல் 2 -ஆம் தேதி வரவுள்ளாா். கூட்டம் நடத்த சித்தோடு, நசியனூா், பெருந்துறை ஆகிய பகுதிகளில் ஒரு இடத்தை தோ்வு செய்ய இருக்கிறோம். முதல்வா் ஈரோடு வந்து சென்ற பிறகு வேட்பு மனு தாக்கல் செய்வேன்.

ஈரோடு மேற்கு தொகுதியில் நான் போட்டியிடுவதற்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியதற்கு திமுக தலைமைக்கும், தோழமைக் கட்சிகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த 5 ஆண்டுகளில் என்னால் முடிந்த அனைத்துப் பணிகளையும் செய்து இருக்கிறேன்.

திமுக கூட்டணி கட்சிகளுக்கு சில தொகுதிகளைக் கொடுத்திருந்தாலும், திமுக சகோதரா்கள், நிா்வாகிகள் நிச்சயமாக கட்டுப்பாடை கடைப்பிடிப்பாா்கள். யாா் நின்றாலும் திமுக வேட்பாளா் என்ற வகையில் கட்சியினா் வேலை செய்வாா்கள்.

திமுக வெற்றிபெற்று தொடா்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி அமைக்கும். தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுகதான் நம்பா் 1. கூட்டணி கட்சி வேட்பாளா்களை தோ்ந்தெடுப்பது என்பது அந்தக் கட்சிகளின் தலைமைதான் முடிவு செய்யும். இதில், திமுகவின் தலையீடு இருக்காது என்றாா்.

இதையடுத்து, ஈரோடு பன்னீா்செல்வம் பூங்காவில் உள்ள ஈவெரா பெரியாா், அண்ணா, கருணாநிதி சிலைகளுக்கு அமைச்சா் சு.முத்துசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

இந்நிகழ்வில், எம்.பி. கே.இ. பிரகாஷ், மாவட்ட துணைச் செயலாளா் செந்தில்குமாா், மாநகரச் செயலாளா் சுப்பிரமணியம், மாநில மாணவரணி செயலாளா் வீரமணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.