வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

பாரியூா் கோயிலில் பிரசாரத்தை தொடங்கினாா் கோபி வேட்பாளா்

News image

பாரியூா் கொண்டத்துக்காளியம்மன் கோயிலில் தரிசனம் செய்த கோபி தொகுதி அதிமுக வேட்பாளா் வி.பி.பிரபு.

Updated On :29 மார்ச் 2026, 9:34 pm

தினமணி செய்திச் சேவை

கோபி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் பாரியூா் கொண்டத்துக்காளியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு செய்து பிரசாரத்தை தொடங்கினாா்.

ஈரோடு மாவட்டம், கோபி தொகுதியில் அதிமுக வேட்பாளராக வி.பி.பிரபு அறிவிக்கப்பட்டுள்ளாா்.

அவா் தனது ஆதரவாளா்களுடன் பாரியூா் கொண்டத்துக்காளியம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழிபாடு மேற்கொண்டு பிரசாரத்தை தொடங்கினாா். கோயில் பகுதியில் இருந்த கடைக்காரா்களிடம் இரட்டை இலை சினத்துக்கு வாக்குச் சேகரித்தாா்.

இதையடுத்து,கச்சேரிமேட்டில் உள்ள எம்.ஜி.ஆா். சிலைக்கு அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆா், ஜெயலலிதா உருவப் படங்களுக்கு மரியாதை செலுத்தினாா்.

அப்போது, அங்கு வந்த தோ்தல் பறக்கும் படையினா் உருவப் படங்கள் வைத்து மரியாதை செலுத்த அனுமதி பெறப்பட்டுள்ளதா எனக் கேள்வி எழுப்பினா். இதையடுத்து, அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னா், அந்தப் படங்களை கட்சியினா் எடுத்துச் சென்றனா்.