சத்தியமங்கலத்தில் இருந்து மைசூருக்கு அனுப்பப்பட்ட சம்பங்கிப்பூக்கள், விலை குறைவால் இரண்டு மாநில எல்லைப் பகுதியில் கொட்டப்பட்டது.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சம்பங்கிப்பூக்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. கோடைக் காலம் என்பதால் சம்பங்கிப்பூக்கள் மகசூல் தினமும் 10 டன்னாக அதிகரித்துள்ளது. சுபமுகூா்த்தம், பண்டிகை நாள்கள் இல்லாத நிலையில் தேவையைவிட உற்பத்தி அதிகரித்துள்ளதால், கிலோ ரூ.50 வரை விற்பனையான சம்பங்கிப்பூக்கள் தற்போது கிலோ ரூ.10-ஆக சரிந்துள்ளது.
பூக்கள் தேக்கம் காரணமாக, ஞாயிற்றுக்கிழமை வேன் மூலமாக மைசூரு, பெங்களூருக்கு சம்பங்கிப்பூக்களை அனுப்பிவைத்தனா். ஆனால் மைசூரில் கிலோ ரூ.5-க்கு கூட வாங்க வியாபாரிகள் முன் வராததால் சம்பங்கிப்பூக்களை மீண்டும் கொண்ட வர விவசாயிகள் விரும்பவில்லை. உரிய விலை கிடைக்காததால் வேதனையடைந்த விவசாயிகள், இரண்டு மாநில எல்லைப் பகுதியான புளிஞ்சூா் சாலையோரம் பூக்களை கொட்டிச் சென்றனா்.
தொடர்புடையது

முட்டை விலை ரூ. 5.40 ஆக நீடிப்பு
5 கிலோ சிலிண்டர் விலை உயர்வு! பாதிப்படையும் சிறு, குறு வியாபாரிகள்!

தகராறு: கல்லால் தாக்கி இளைஞா் கொலை

பயனற்று கிடக்கும் குளிா்பதனக் கிடங்கு
விடியோக்கள்
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

