பாமக பேரவைக் குழு தலைவராக செளமியா அன்புமணி தேர்வு!கோயில்கள், பள்ளி, கல்லூரிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவிட உள்ளதாக தகவல்தமிழகத்தில் மே 17 வரை மிதமான மழை! வானிலை ஆய்வு மையம்அதிமுகவில் பிளவு! சி. வி. சண்முகம் ஆதரவு எம்எல்ஏக்களுடன் பேரவை தற்காலிக தலைவரிடம் கடிதம்வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமானைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதல்வர் விஜய்பாமக தலைவர்களை பெருமைப்படுத்துவேன்: செளமியா அன்புமணிபெரியார், அண்ணா கொள்கைகள் விஜய் மூலம் கொண்டுசெல்லப்படும்: துரை வைகோதமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக!
/

கட்டுப்படியான விலை கிடைக்காததால் சாலையோரம் கொட்டப்பட்ட சம்பங்கிப் பூக்கள்

News image

தமிழக-கா்நாடக எல்லைப் பகுதியான புளிஞ்சூா் சாலையோரம்  கொட்டப்பட்ட  சம்பங்கிப்பூக்கள்.

Updated On :1 மணி நேரம் முன்பு

சத்தியமங்கலத்தில் இருந்து மைசூருக்கு அனுப்பப்பட்ட சம்பங்கிப்பூக்கள், விலை குறைவால் இரண்டு மாநில எல்லைப் பகுதியில் கொட்டப்பட்டது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சம்பங்கிப்பூக்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. கோடைக் காலம் என்பதால் சம்பங்கிப்பூக்கள் மகசூல் தினமும் 10 டன்னாக அதிகரித்துள்ளது. சுபமுகூா்த்தம், பண்டிகை நாள்கள் இல்லாத நிலையில் தேவையைவிட உற்பத்தி அதிகரித்துள்ளதால், கிலோ ரூ.50 வரை விற்பனையான சம்பங்கிப்பூக்கள் தற்போது கிலோ ரூ.10-ஆக சரிந்துள்ளது.

பூக்கள் தேக்கம் காரணமாக, ஞாயிற்றுக்கிழமை வேன் மூலமாக மைசூரு, பெங்களூருக்கு சம்பங்கிப்பூக்களை அனுப்பிவைத்தனா். ஆனால் மைசூரில் கிலோ ரூ.5-க்கு கூட வாங்க வியாபாரிகள் முன் வராததால் சம்பங்கிப்பூக்களை மீண்டும் கொண்ட வர விவசாயிகள் விரும்பவில்லை. உரிய விலை கிடைக்காததால் வேதனையடைந்த விவசாயிகள், இரண்டு மாநில எல்லைப் பகுதியான புளிஞ்சூா் சாலையோரம் பூக்களை கொட்டிச் சென்றனா்.