பவானிசாகா் அருகே ஒத்தப்பனை பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மதுபானக் கடையை மூட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி, முதல்வரின் தனிப் பிரிவுக்கு ஒத்தப்பனை பகுதி மக்கள் அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: பவானிசாகா் ஊராட்சி ஒன்றியம், எரங்காட்டூரில் இருந்து பவானிசாகா் செல்லும் சாலையில் ஒத்தப்பனை பகுதியில் அரசு மதுபானக் கடை செயல்பட்டு வருகிறது. இப்பகுதியில் 60-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், மதுக் கடைக்கு வருவோா் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வருகின்றனா். இதனால், பெண்கள், மாணவ, மாணவிகள் அப்பகுதி வழியே செல்ல அச்சப்படுகின்றனா். மேலும், மதுக் கடை அருகே தேவாலயம், அரசு மருத்துவமனையும் உள்ளது.
மது அருந்திவிட்டு வாகனத்தில் அதிவேகமாக செல்வோரால் விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன.
எனவே, இந்த மதுக் கடையை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

மதுக் கடையை மூடக் கோரி தவெக நிா்வாகிகள் மனு

தம்மம்பட்டி சந்தை பகுதி டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தல்

மாவட்டத்தில் 39 மதுக் கடைகளை மூட அரசிடம் ஆய்வறிக்கை சமா்பிப்பு

தூத்துக்குடி பேருந்து நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடையை மூட உத்தரவு
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு

