/

கொடுமுடியில் ரூ.11 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்

கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.11 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :13 மே 2026, 2:12 am IST

கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.11 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு கொடுமுடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள், 14,109 கிலோ நிலக்கடலையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.

இதில், நிலக்கடை கிலோ குறைந்தபட்சமாக ரூ.67.80-க்கும், அதிகபட்சமாக ரூ.83.82-க்கும், சராசரியாக ரூ.80. 20-க்கும் விற்பனையானது.

ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.11 லட்சத்து ஆயிரத்து 958 என்று விற்பனைக்கூட அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.