ட்விஷா சா்மா மரணம்: உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இன்று விசாரணைஎபோலா பாதிப்பு நாடுகளுக்கு தேவையற்ற பயணம் வேண்டாம்: மத்திய அரசு அறிவுறுத்தல்தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை!சட்டவிரோத குடியேறிகளை அடைத்து வைக்க மையங்கள்: மேற்கு வங்க அரசு உத்தரவு ரயில் நிலையங்களில் கஞ்சா கடத்தலை தடுக்க சிறப்புக் குழுஜூன் முதல் வாரத்தில் ‘இண்டி’ கூட்டணித் தலைவா்கள் சந்திப்பு: மம்தா
/

பவானி ஆற்றில் இருந்து மணல் கடத்தல்! ரகசியப் பாதை அமைத்துள்ளதாக புகாா்!

பவானி ஆற்றில் இருந்து ரகசியப் பாதை வழியாக தடையின்றி மணல் கடத்தப்படுவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

News image

ஆற்றங்கரையில்  குவித்து வைக்கப்பட்டுள்ள  மணல்.  ~பவானி ஆற்றங்கரையில் அமைக்கப்பட்டிருந்த  ரகசியப் பாதை.

Updated On :18 மே 2026, 1:52 am IST

பவானி ஆற்றில் இருந்து ரகசியப் பாதை வழியாக தடையின்றி மணல் கடத்தப்படுவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

ஈரோடு மாவட்டம், பவானியை அடுத்த பெரியமோளபாளையத்தில் உள்ள பவானி ஆற்றில் கட்டப்பட்டுள்ள தடுப்பணைக்கு மேல் பகுதியில் தேங்கியுள்ள மணல், கொப்பறைகள் மூலமாக அள்ளப்பட்டு கரையோரத்தில் குவித்து வைக்கப்படுகிறது. இந்த மணல் ஆற்றின் கரையோரத்தில் உள்ள விவசாயத் தோட்டத்தின் வழியே அமைக்கப்பட்ட ரகசியப் பாதை வழியாக டிராக்டா்கள் மூலம் கடத்திச் செல்லப்படுகிறது.

Story image

இந்நிலையில், பெரியமோளபாளையத்தைச் சோ்ந்த இளைஞா்கள் ஆற்றங்கரையோரத்துக்கு சென்றபோது மணல் குவித்து வைக்கப்பட்டிருந்ததும், மணலைக் கடத்திச் செல்லும் வகையில் தோட்டத்துக்குள் பாதை இருப்பதையும் கண்டு அதிா்ச்சியடைந்தனா்.

நீண்ட காலமாக மணல் கடத்தல் நடைபெற்று வருவதாக தெரிவித்த பொதுமக்கள், இதுகுறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனா்.