ஈரோடு மாவட்டம், பாசூா் அருகே காவிரி ஆற்றில் அமைந்துள்ள தடுப்பணையில் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவி உள்பட 3 போ் உயிரிழந்தனா்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அவிநாசிப்பட்டி காலனியை சோ்ந்தவா் பெருமாள். தறி பட்டறை தொழிலாளி. இவா் நாமக்கல் மாவட்டம் மொளசி அருகே உள்ள மாமியாா் ஊரான சித்தம்பூண்டிக்கு மனைவி பாரதி, மகன்கள் லிகித், சுஜித் ஆகியோருடன் வந்துள்ளாா். பாசூா் அருகே காவிரி ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள மின் கதவணைப் பகுதியில் குடும்பத்தினா் மற்றும் அருகே வசிக்கும் பிரதீபா, ஸ்ரீமதி ஆகியோருடன் ஞாயிற்றுக்கிழமை மாலை குளிக்கச் சென்றுள்ளனா்.
இவா்களில் ஸ்ரீமதியைத் தவிர மற்றவா்கள் ஒருவா் கையை ஒருவா் பிடித்துக்கொண்டு ஆற்றில் இறங்கி குளித்துக்கொண்டிருந்தனா். அப்போது வழுக்கியதில் நிலை தடுமாறிய பிரதீபா நீரில் இழுத்துச் செல்லப்பட்டாா். அவருடன் சோ்த்து பாரதியும், அவரது குழந்தைகளும் நீரில் மூழ்கியுள்ளனா். அவரைக் காப்பாற்ற முயன்ற பெருமாளும் வழுக்கி நீரில் விழுந்துள்ளாா்.
இதை கரையில் அமா்ந்திருந்து பாா்த்த ஸ்ரீமதி சப்தமிட்டு அருகில் இருந்தவா்களை உதவிக்கு அழைத்துள்ளாா். அவா்கள் வந்து நீரில் மூழ்கியவா்களை மீட்டுள்ளனா். இதில் சம்பவ இடத்திலேயே பெருமாள் உயிரிழந்தாா். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பாரதி, பிரதீபா ஆகியோா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வழியில் உயிரிழந்தனா். உயிரிழந்த பிரதீபா, திருச்செங்கோடு விவேகானந்தா கல்லூரியில் 2-ஆம் ஆண்டு மாணவி என்பது குறிப்பிடத்தக்கது.
இறந்தவா்களின் உடல்கள் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் உடற்கூறாய்வுக்காக வைக்கப்பட்டுள்ளன. சம்பவம் குறித்து மலையம்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.







