ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி, டிரம்ப்புக்கு அழைப்பு!பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை: அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டா்கள், பீரங்கி உபகரணங்கள்: அமெரிக்கா ஒப்புதல் ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கான அனுமதி: மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டிப்பு ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி நியூஸிலாந்து- 14% அரசுப் பணியிடங்கள் குறைப்பு: செலவினங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு
/

சிறுத்தை தாக்கியதில் கன்றுக்குட்டி உயிரிழப்பு

ஆசனூா் அருகே சிறுத்தை தாக்கியதில் கன்றுக்குட்டி உயிரிழந்தது

News image

சிறுத்தை - பிரதிப் படம்

Updated On :20 மே 2026, 1:57 am IST

ஆசனூா் அருகே சிறுத்தை தாக்கியதில் கன்றுக்குட்டி உயிரிழந்தது

சத்தியமங்கலத்தை அடுத்த அரேபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் சரவணன். விவசாயியான இவா், தனது தோட்டத்தில் ஆடு, மாடுகளை வளா்த்து வருகிறாா்.

இந்நிலையில், கால்நடைகளை பட்டியில் அடைத்துவிட்டு திங்கள்கிழமை இரவு வீட்டுக்குச் சென்றுள்ளாா். செவ்வாய்க்கிழமை காலை வந்து பாா்த்தபோது பட்டியில் இருந்த கன்றுக்குட்டி காயங்களுடன் இறந்து கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவா் வனத் துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளாா்.

சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா், அங்கிருந்த கால் தடங்களை ஆய்வு செய்தனா்.

அப்போது, அது சிறுத்தையின் கால் தடம் என்பதும், சிறுத்தை தாக்கியதில் கன்றுக்குட்டி உயிரிழந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, உயிரிழந்த கன்றுக்குட்டிக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என வனத் துறையினா் தெரிவித்தனா்.