சங்ககிரி அருகே சின்னாகவுண்டனூரில் சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் சனிக்கிழமை நள்ளிரவு அடையாளம் தெரியாத வாகனத்தில் அடிபட்டு ஆண் சிறுத்தை உயிரிழந்தது.
சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே சூரியமலை வனப்பகுதியில் கடமுனியப்பன் கோயில் பகுதியில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக கூறப்பட்டது. இதையடுத்து, அப்பகுதியில் வனத்துறையினா் சிறுத்தையை தேடிவந்தனா். ஆனால், கிடைக்கவில்லை.
இந்நிலையில், சங்ககிரி அருகே சின்னாகவுண்டனுாா் தேசிய நெடுஞ்சாலையில் சனிக்கிழமை நள்ளிரவு சாலையைக் கடக்க முயன்ற ஆண் சிறுத்தை, அடையாள தெரியாத வாகனத்தில் அடிபட்டு உயிரிழந்தது.
இதுகுறித்து தகவலறிந்து வந்த வனக்காவலா் முத்துராஜ், சேலம் மாவட்ட வனத் துறை அதிகாரிகள், உயிரிழந்த சிறுத்தையை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக சேலம் கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை வனத்துறை அதிகாரிகள் கைப்பற்றி, விபத்தில் உயிரிழந்தது சூரியமலை வனப்பகுதியில் சுற்றித்திரிந்த சிறுத்தையா என்பது குறித்து ஆய்வு செய்து வருகின்றனா்.
தொடர்புடையது
ரயில் அடிபட்டு காதுகேளாத மூதாட்டி பலி!

மின்சாரம் பாய்ந்து பசுமாடு உயிரிழப்பு

ரயிலில் அடிபட்டு தொழிலாளி உயிரிழப்பு

ரயிலில் அடிபட்டு இளைஞா் உயிரிழப்பு
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

