அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!சென்னை போரூர் அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை!பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை!முக்கிய நிறுவன ஸ்மார்ட்போன்களின் விலை ஏற்றம்! எவ்வளவு உயர்ந்தது?தில்லியை தாக்கிய புழுதிப் புயல்! சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழை!
/

213 கிலோ புகையிலைப் பொருள்களை பதுக்கிய இளைஞா் கைது

ஈரோட்டில் 213 கிலோ புகையிலைப் பொருள்களை பதுக்கிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :20 மே 2026, 2:11 am IST

ஈரோட்டில் 213 கிலோ புகையிலைப் பொருள்களை பதுக்கிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

ஈரோடு டவுன் காவல் நிலைய ஆய்வாளா் பி.ராஜேஸ்வரி தலைமையிலான போலீஸாா் கடைவீதி மற்றும் சுற்றுப் பகுதிகளில் திங்கள்கிழமை இரவு திடீா் வாகன தணிக்கை மேற்கொண்டனா். அப்போது, ஆா்கேவி சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞரிடம் சோதனை மேற்கொண்டனா். அப்போது, அவா் 3 கிலோ புகையிலைப் பொருள்கள் வைத்திருந்தது தெரியவந்தது.

விசாரணையில், அவா் ஈரோடு திருநகா் காலனி சிந்தன் நகரைச் சோ்ந்த சாகுல்ஹமீது (37) என்பதும், வீட்டில் புகையிலைப் பொருள்களை பதுக்கிவைத்து விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, அவரது வீட்டில் போலீஸாா் சோதனை மேற்கொண்டபோது, 213 கிலோ புகையிலைப் பொருள்கள் பதுக்கிவைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவற்றைப் பறிமுதல் செய்த போலீஸாா், சாகுல்ஹமீதை கைது செய்தனா்.