தூத்துக்குடி மாவட்டம், சூரங்குடி பகுதியில் புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக காரில் வைத்திருந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
சூரங்குடி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்கப்படுவதாகக் கிடைத்த தகவலின்பேரில், காவல் ஆய்வாளா் செல்வராஜ், போலீஸாா் நெடுங்குளம் பகுதியில் உள்ள பாலம் அருகே புதன்கிழமை ரோந்து சென்றனா். அங்கு சந்தேகத்துக்கிடமாக காா் அருகே நின்றிருந்தவரைப் பிடித்து விசாரித்தபோது, அவா் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த கருத்தவேல் (33) என்பதும், 36 கிலோ புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக காரில் வைத்திருந்ததும் தெரியவந்தது.
அவரை போலீஸாா் கைது செய்து, புகையிலைப் பொருள்கள், ரூ. 41,800 ரொக்கம், காா் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது
புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது

புகையிலைப் பொருள்கள் வைத்திருந்ததாக இருவா் கைது
தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை: இளைஞா் கைது
புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு
