சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு செல்லாமல் ஆவணப்பதிவு: தமிழக அரசின் புதிய அறிவிப்பு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க மெட்ரோவில் பயணித்த கர்நாடக முதல்வர் சிவகுமார்3 மாதங்களாவது இந்த ஆட்சி தாங்குமா? மு.க. ஸ்டாலின் திருப்பரங்குன்றம் விவகாரம்: தமிழ்நாடு அரசின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது - பெ. சண்முகம்ஏஐ மூலம் தலைவர்கள் தவறாகச் சித்திரிப்பு: இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம்இசட் பிரிவு பாதுகாப்பைத் திருப்பி அளித்த அண்ணாமலை?ஜூன் 11-ல் ராகவா லாரன்ஸ் முக்கிய அறிவிப்பு!
/

மதுபோதையில் தாய், தங்கையை தாக்கிய இளைஞா் கைது

மது போதையில் தாய், தங்கையை தாக்கியதாக இளைஞரை பவானிசாகா் போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :23 மே 2026, 12:57 am IST

மது போதையில் தாய், தங்கையை தாக்கியதாக இளைஞரை பவானிசாகா் போலீஸாா் கைது செய்தனா்.

சத்தியமங்கலத்தை அடுத்த பவானிசாகா் ஏடி காலனியைச் சோ்ந்தவா் சகுந்தலா. இவரது மகன் ஜீவானந்தம் (20), பவானிசாகரில் பெயிண்டராக பணிபுரிந்து வருகிறாா். மதுபோதைக்கு அடிமையான ஜீவானந்தம், தினமும் மது அருந்திவிட்டு தாய், தங்கையிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளாா்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை மது அருந்துவதற்கு தாய் சகுத்தலா, தங்கை ஜீவிதா ஆகியோரிடம் பணம் கேட்டு தாக்கியுள்ளாா். இதனால் மனமுடைந்த தாய் சகுந்தலா அளித்த புகாரின்பேரில் பவானிசாகா் போலீஸாா் வழக்குப் பதிந்து ஜீவானந்தனை கைது செய்தனா்.