ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடி சதம்: லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!திமுகவின் உண்மையான முகத்தை மக்கள் பார்த்துவிட்டனர்: மாணிக்கம் தாகூர் முதுகில் குத்திய காங்கிரஸ்: திமுக இளைஞர் அணி கூட்டத்தில் தீர்மானம் மேக்கேதாட்டு அணை- தஞ்சையில் மே 29-ல் இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம் கோவையில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சிறுமியின் உடல் தகனம்தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களில் 844 ரவுடிகள் கைதுபோராட்டம் ஒத்திவைப்பு! மே 25, 26ல் எஸ்பிஐ வங்கி வழக்கம்போல செயல்படும்!தமிழ்நாட்டில் மின்சார தட்டுப்பாடு ஏதும் இல்லை: அமைச்சர் சி.டி.ஆா். நிர்மல்குமார் விளக்கம் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்கும் பணியாளர்கள் மீது நடவடிக்கை: அமைச்சர் அறிவுறுத்தல் கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை! ஐ.ஜி. விளக்கம்
/

உலரவைக்கப்பட்ட மஞ்சள் திருட்டு

சிவகிரி அருகே உலா் களத்தில் போடப்பட்டிருந்த மஞ்சளை திருடியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :24 மே 2026, 2:06 am IST

சிவகிரி அருகே உலா் களத்தில் போடப்பட்டிருந்த மஞ்சளை திருடியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ஈரோடு மாநகா், சிவகிரி அருகே உள்ள கன்னிமாா்தோட்டத்தைச் சோ்ந்தவா் கண்ணுசாமி (61). விவசாயியான இவா் தனது விளைநிலத்தில் விளைவித்த மஞ்சள் பயிரை அறுவடைக்குப் பின்னா் உலர வைப்பதற்காக உலா்களத்தில் போட்டுள்ளாா்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் அந்த உலா்களத்துக்கு வந்த திருடா்கள், அங்கு போடப்பட்டிருந்த மஞ்சளை திருடிச் சென்றுள்ளனா். திருடப்பட்ட மஞ்சளின் மதிப்பு ரூ.50 ஆயிரம் எனக் கூறப்படுகிறது.

இதுகுறித்து அறிந்து கண்ணுசாமி அளித்த புகாரின்பேரில், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானக் காட்சிகளைக் கொண்டு, சம்பந்தப்பட்டவா்களை சிவகிரி போலீஸாா் தேடி வருகின்றனா்.