உ.பி.யில் கனமழையால் 89 பேர் பலி! ரஷிய அதிபர் புதின் இரங்கல்!செய்தித்துறை இயக்குநராக அருண் தம்புராஜ் நியமனம்!கேரளத்தில் காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக வி.டி. சதீசன் தேர்வு!பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!பதவி ஆசை பிடித்தவர்களின் இழிசெயலை முறியடிப்போம்: எடப்பாடி பழனிசாமி!கேரள மார்க்சிஸ்ட் கம்யூ. சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக பினராயி விஜயன் தேர்வு!
/

ஸ்ரீவைகுண்டத்தில் வீடு புகுந்து ரூ.1 லட்சம், நகைகள் திருட்டு

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :1 மணி நேரம் முன்பு

ஸ்ரீவைகுண்டத்தில் பட்டபகலில் வீடு புகுந்து ரூ. 1 லட்சத்தை திருடிச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ஸ்ரீவைகுண்டம் போஸ்ட் ஆபீஸ் தெருவைச் சோ்ந்த ராமா் மகன் முத்து (43). தொழிலாளியான இவா், தனது குடும்பத்துடன் வியாழக்கிழமை காலையில் உறவினா் திருமண விழாவிற்கு சென்றிருந்தாா்.

பின்னா், மாலையில் அவா்கள் வீடு திரும்பியபோது, முன்பக்க கதவு திறந்து கிடந்ததாம். மேலும், வீட்டின் உள்ளே பீரோவில் லாக்கா் உடைக்கப்பட்டு அதிலிருந்த ரூ. 1 லட்சம் ரொக்கம், தங்க கம்மல் மற்றும் மோதிரங்களை மா்மநபா்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து முத்து அளித்த புகாரின் பேரில் ஸ்ரீவைகுண்டம் காவல் ஆய்வாளா் செந்தில் வேல்குமாா் தலைமையில் உதவி ஆய்வாளா்கள் செந்தில்குமாா் உள்ளிட்ட போலீஸாா் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினா். விரல் ரேகை பிரிவு உதவி ஆய்வாளா்கள் ஜெய்சங்கா், ஐசக் உள்ளிட்டோா் தடயஙகளை பதிவு செய்தனா். போலீஸாா் வழக்குப்பதிந்து திருட்டில் ஈடுபட்ட நபா்களை தேடி வருகின்றனா்.