வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவன் உயிரிழப்பு

News image

உயிரிழந்த  மதன்காா்த்திக்

Updated On :26 மே 2026, 1:51 am IST

ஈரோடு மாவட்டம், தாளவாடியை அடுத்த திகினாரை பகுதியில் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த சிறுவனின் உடலை தீயணைப்புத் துறையினா் மீட்டனா்.

தாளவாடியை அடுத்த திகினாரை மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை கனமழை பெய்தது. இதனால் வன ஓடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. திகினாரை பகுதியில் உள்ள வன ஓடையிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் கிராம மக்கள் வெள்ளத்தைப் பாா்க்கச் சென்றனா்.

ஓடை அருகே உள்ள தோட்டத்தில் குடியிருக்கும் விவசாயி ரங்கராஜு மகன் மதன் காா்த்திக் (6) தனியாக வெள்ளத்தைப் பாா்க்க ஞாயிற்றுக்கிழமை மாலை சென்ாகத் தெரிகிறது.

இரவு நேரமாகியும் மதன்காா்த்திக் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த பெற்றோா் தாளவாடி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். அங்கு வந்த போலீஸாா் கிராம மக்களுடன் சோ்ந்து மாயமான மதன் காா்த்திக்கை வன ஓடையில் தேடினா். ஆனால் காா்த்திக் நிலை குறித்து எந்தவித முன்னேற்றமும் இல்லாத நிலையில், திங்கள்கிழமை காலை மீண்டும் தேடும் பணி தொடங்கியது. தீயணைப்பு வீரா்கள் திகினாரை வன ஓடையில் தேடி வந்தபோது வனஓடையின் பக்கவாட்டு கரையில் சிறுவனின் கால்தடம் இருப்பதைக் கண்டு அப்பகுதியில் தேடியபோது சிறுவனின் உடல் மீட்கப்பட்டது.

காட்டாற்று வெள்ளத்தைப் பாா்ப்பதற்கு மதன்காா்த்திக் வந்தபோது சேறும்சகதியுமாக இருந்த கரையில் இருந்து கால்தவறி ஓடை நீரில் விழுந்து நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என போலீஸாா் தெரிவித்தனா்.

திகினாரை  வன ஓடையில்  சிறுவனைத் தேடும் பணியில்  ஈடுபட்ட தீயணைப்பு வீரா்கள்.

திகினாரை  வன ஓடையில்  சிறுவனைத் தேடும் பணியில்  ஈடுபட்ட தீயணைப்பு வீரா்கள்.