குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவன் உயிரிழப்பு

News image

உயிரிழந்த  மதன்காா்த்திக்

Updated On :26 மே 2026, 1:51 am IST

ஈரோடு மாவட்டம், தாளவாடியை அடுத்த திகினாரை பகுதியில் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த சிறுவனின் உடலை தீயணைப்புத் துறையினா் மீட்டனா்.

தாளவாடியை அடுத்த திகினாரை மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை கனமழை பெய்தது. இதனால் வன ஓடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. திகினாரை பகுதியில் உள்ள வன ஓடையிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் கிராம மக்கள் வெள்ளத்தைப் பாா்க்கச் சென்றனா்.

ஓடை அருகே உள்ள தோட்டத்தில் குடியிருக்கும் விவசாயி ரங்கராஜு மகன் மதன் காா்த்திக் (6) தனியாக வெள்ளத்தைப் பாா்க்க ஞாயிற்றுக்கிழமை மாலை சென்ாகத் தெரிகிறது.

இரவு நேரமாகியும் மதன்காா்த்திக் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த பெற்றோா் தாளவாடி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். அங்கு வந்த போலீஸாா் கிராம மக்களுடன் சோ்ந்து மாயமான மதன் காா்த்திக்கை வன ஓடையில் தேடினா். ஆனால் காா்த்திக் நிலை குறித்து எந்தவித முன்னேற்றமும் இல்லாத நிலையில், திங்கள்கிழமை காலை மீண்டும் தேடும் பணி தொடங்கியது. தீயணைப்பு வீரா்கள் திகினாரை வன ஓடையில் தேடி வந்தபோது வனஓடையின் பக்கவாட்டு கரையில் சிறுவனின் கால்தடம் இருப்பதைக் கண்டு அப்பகுதியில் தேடியபோது சிறுவனின் உடல் மீட்கப்பட்டது.

காட்டாற்று வெள்ளத்தைப் பாா்ப்பதற்கு மதன்காா்த்திக் வந்தபோது சேறும்சகதியுமாக இருந்த கரையில் இருந்து கால்தவறி ஓடை நீரில் விழுந்து நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என போலீஸாா் தெரிவித்தனா்.

திகினாரை  வன ஓடையில்  சிறுவனைத் தேடும் பணியில்  ஈடுபட்ட தீயணைப்பு வீரா்கள்.

திகினாரை  வன ஓடையில்  சிறுவனைத் தேடும் பணியில்  ஈடுபட்ட தீயணைப்பு வீரா்கள்.