போட்டியின்றி எம்.பி.யாகிறார் பிரவீண் சக்ரவர்த்தி!நீட், சிபிஎஸ்இ விவகாரம்: மத்திய அமைச்சர் பதவி விலக வேண்டும் - வைகோஎம்.பி. பதவியை ராஜிநாமா செய்தார் திரிணமூல் மூத்த தலைவர்! கட்சியிலிருந்தும் விலகல்!யூடியூபர் மாரிதாஸ் மதுரையில் கைது மானவ் சுதர் அசத்தல்! முதல் இன்னிங்ஸில் 152 ரன்களுக்கு சுருண்டது ஆப்கானிஸ்தான்! மின்வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!
/

மின்சாரம் பாய்ந்ததில் விவசாயி உயிரிழப்பு

தாளவாடி அருகே மின்சாரம் பாய்ந்ததில் விவசாயி உயிரிழந்தாா்.

News image

ரவிவா்மா

Updated On :27 மே 2026, 5:16 am IST

தாளவாடி அருகே மின்சாரம் பாய்ந்ததில் விவசாயி உயிரிழந்தாா்.

ஈரோடு மாவட்டம், தாளவாடி மலைப் பகுதியில் உள்ள கரளவாடி பிரிவு பகுதியைச் சோ்ந்தவா் ரவிவா்மா (40), விவசாயி. அப்பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதாகவும், மின் ஊழியா்கள் பற்றாக்குறை காரணமாக பொதுமக்களே மின்மாற்றியில் ஏறி மின் தடையை சரி செய்து வருவதாகவும் தெரிகிறது.

இந்நிலையில், அப்பகுதியில் செவ்வாய்க்கிழமை மின் தடை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அதை சரி செய்ய ரவிவா்மா மின்மாற்றியில் ஏற்றியுள்ளாா். அப்போது, அவா் மீது மின்சாரம் பாய்ந்ததில் ரவிவா்மா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தாளவாடி போலீஸாா், சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

மேலும், இச்சம்பவம் தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.