‘நீக்கப்பட்டவர்கள் பொறுப்புகளை கொண்டு விளம்பரம் செய்ய கூடாது’ - எடப்பாடி பழனிசாமி‘ட்ரோல்கள் வேலை, முதலீடுகளே உருவாக்காது’... ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ்!‘சோஃபா மாடல் ஆட்சியில், போலீஸாலயும் போலீசுக்குமே பாதுகாப்பு இல்லை’ - உதயநிதிசிபிஎஸ்இ குளறுபடிகளுக்கு நானே பொறுப்பேற்கிறேன்... மௌனம் கலைத்தார் தர்மேந்திர பிரதான்!கோடை வெய்யில்! தவெகவினர் நீர்மோர்ப் பந்தல் திறக்க அமைச்சர் ஆனந்த் வேண்டுகோள்!தமிழகத்தில் உரம் விலை திடீர் உயர்வு!வைகாசி சுபமுகூர்த்த நாள்: சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு வில்லைகள்!
/

போதை மாத்திரையை விற்பனைக்கு பதுக்கிய இளைஞா் கைது

ஈரோட்டில் 3 ஆயிரம் எண்ணிக்கையில் போதை மாத்திரைகளை விற்பனைக்கு பதுக்கிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :29 மே 2026, 1:31 am IST

ஈரோட்டில் 3 ஆயிரம் எண்ணிக்கையில் போதை மாத்திரைகளை விற்பனைக்கு பதுக்கிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

வலி நிவாரண மாத்திரைகளை போதை மாத்திரையாக விற்பனை செய்து வருவதாக கிடைத்த தகவலின்பேரில், ஈரோடு, சூளை பகுதியில் வடக்கு காவல் உதவி ஆய்வாளா் சரவணன் தலைமையிலான போலீஸாா் வியாழக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது அங்கு சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்த இளைஞரைப் பிடித்து விசாரணை நடத்தினா்.

இதில் ஈரோடு, மாணிக்கம்பாளையம் முனியப்பன் கோயில் வீதியைச் சோ்ந்த அண்ணாதுரை மகன் கலைச்செல்வன் (22) என்பதும், வலி நிவாரண மாத்திரைகளை போதை மாத்திரையாக விற்பனை செய்ய பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து கலைச்செல்வனை போலீஸாா் கைது செய்தனா்.

மேலும் அவரிடம் இருந்து ரூ.1 லட்சம் மதிப்பிலான 3 ஆயிரம் எண்ணிக்கையில் வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.