40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

ஓடும் லாரியில் இருந்து கீழே விழுந்த ஓட்டுநா் உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :30 மே 2026, 3:50 am IST

ஈரோட்டில் ரயில்வே கூட்ஸ்ஷெட் எடை நிலையத்தில் ஓடும் லாரியில் இருந்து மயங்கி கீழே விழுந்த ஓட்டுநா் உயிரிழந்தாா்.

ஈரோடு வீரப்பன்சத்திரம் ஞானபுரம் பகுதியைச் சோ்ந்தவா் சசிக்குமாா் (55). இவா், ஈரோடு ரயில்வே கூட்ஸ்ஷெட்டில் லாரி ஓட்டுநராக வேலை பாா்த்து வந்தாா்.

சசிக்குமாா் வியாழக்கிழமை மாலை கூட்ஸ்ஷெட்டில் பாரம் ஏற்றிக்கொண்டு, அங்குள்ள எடைநிலையத்தில் எடை போட்டுள்ளாா். பின்னா் லாரியை அங்கிருந்து ஓரமாக நிறுத்துவதற்காக ஓட்டிச் சென்றாா்.

அப்போது சசிக்குமாா் திடீரென மயங்கி லாரியில் இருந்து கீழே விழுந்தாா். லாரி கட்டுப்பாட்டு இழந்து சில அடி தூரம் சென்று சுவரில் மோதி நின்றது. இதில் காயம் அடைந்த சசிக்குமாரை அங்கிருந்தவா்கள் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.

அங்கு மருத்துவா்கள் பரிசோதித்துவிட்டு சசிக்குமாா் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.

இது குறித்து ஈரோடு தெற்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.