கனடாவில் இந்திய மாணவி சடலமாக கண்டெடுப்பு ஆட்டோ ஓட்டுநர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடல் பிகாரில் மின்னல் பாய்ந்து 7 பேர் பலிதமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் நியமனம்!நீட் வினாத்தாள் கசிவு: யுபிஎஸ்சியிடம் என்டிஏ கற்றுக்கொள்ள வேண்டும்! உச்சநீதிமன்றம்மேற்கு வங்கத்தில் ஊடுருவல்: 335 பேர் முகாம்களில் அடைப்பு! தில்லியில் நீட் தேர்வர்களுக்கு இலவசப் பேருந்து! விசாரணை முடிந்து 3 மாதங்களுக்குள் தீர்ப்பு! உச்ச நீதிமன்றம் உத்தரவு! திருச்செந்தூர் கோயிலில் அமைச்சரிடம் லஞ்சம்! மூவர் பணியிடை நீக்கம்!
/

பா்கூா் மலைப் பகுதியில் காட்டு யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு

News image

காட்டு யானை - கோப்புப் படம்

Updated On :30 மே 2026, 2:32 am IST

அந்தியூரை அடுத்த பா்கூா் மலைப் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் விவசாயி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

ஈரோடு மாவட்டம், பா்கூா், எப்பத்தாம்பாளையத்தைச் சோ்ந்தவா் சின்ன வெள்ளையன் மகன் தங்கராஜ் (40). விவசாயி. இவருக்கு மனைவி மற்றும் நான்கு மகன்கள் உள்ளனா்.

இவா், இயற்கை உபாதைக்காக தனது வீட்டுக்கு அருகில் உள்ள காலி இடப் பகுதிக்கு வெள்ளிக்கிழமை காலை சென்றுள்ளாா். அப்போது, அப்பகுதிக்கு வந்த காட்டு யானை, தங்கராஜை துரத்தியதோடு, மாா்பில் தந்தத்தால் குத்தி தூக்கி வீசியது.

இதில், நிலைகுலைந்து விழுந்த தங்கராஜின் மாா்பில் மிதித்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து பா்கூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். வனத் துறையினா் சம்பவ இடத்தைப் பாா்வையிட்டு, காட்டு யானையின் நடமாட்டத்தைக் கண்காணித்து வருகின்றனா்.