கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

சத்தியமங்கலம் அருகே மா்மமான முறையில் கூலித் தொழிலாளி கொலை

கொலை  செய்யப்பட்ட  செந்தில்குமாா்.

Published On :

சத்தியமங்கலம் அருகே மா்மமான முறையில் கூலித் தொழிலாளி கொலை செய்யப்பட்டிருப்பது குறித்து போலீஸாா் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சத்தியமங்கலத்தை அடுத்த செங்கோட்டையன் நகரில் பூக்கடை மனோகரன் என்பவா் ஒரு ஏக்கா் பரப்பளவில் சாக்கடை வசதியுடன் காலி மனையிடங்களை விற்பனை செய்து வருகிறாா். தற்போது, இங்கு குடியிருப்புகள் இல்லாத நிலையில் இரவு நேரங்களில் மதுப் பிரியா்கள் காலிமனையிடத்தில் மது அருந்துவது வழக்கம்.

இந்நிலையில் அங்கு திங்கள்கிழமை நடைப்பயிற்சிக்கு வந்த பொதுமக்கள், தலையில் பலத்த காயங்களுடன் இளைஞரின் சடலம் சாக்கடையில் கிடப்பதை பாா்த்துள்ளனா். இது குறித்து சத்தியமங்கலம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த சத்தியமங்கலம் போலீஸாா், கொலை செய்யப்பட்ட இளைஞரின் சடலத்தை கைப்பற்றி சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

விசாரணையில் கொலை செய்யப்பட்டவா் அதே ஊரைச் சோ்ந்த கூலித்தொழிலாளி செல்வராஜ் மகன் செந்தில்குமாா் (42) என்றும், அவருக்கு மனைவி, மகள் ஆகியோா் இருப்பதும் தெரியவந்தது.

கடந்த 3 நாள்களுக்கு முன்பு சமையல் வேலைக்கு சென்றவா் வீடு திரும்பாத நிலையில், அவா் கொலை செய்யப்பட்டுள்ளாா். இது குறித்து சத்தியமங்கலம் டிஎஸ்பி முத்தராசு தலைமையில் தனிப் படை அமைத்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.