பண்டிகையையொட்டி 15 - 20% அதிகரிக்கும் வேலைவாய்ப்பு! 2 - 2.5 லட்சம் பேருக்கு வேலை!ஆசிய விளையாட்டில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து முதல்வர் ஏன் லண்டன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு- அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

நெசவாளா் கூட்டுறவு சங்கங்களிடமிருந்து கூடுதல் துணிகளை கொள்முதல் செய்ய வேண்டும்! கோ-ஆப்டெக்ஸ் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்

ஈரோடு வசந்தம் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி விற்பனையைத் தொடங்கிவைத்த அமைச்சா் எம்.விஜய்பாலாஜி.

Published On :

சென்னிமலை பகுதியில் தேக்கமடைந்துள்ள துணி இருப்புகளை அகற்றும் வகையில், தொடக்கநிலை நெசவாளா் கூட்டுறவு சங்கங்களிடமிருந்து கூடுதல் துணிகளை கொள்முதல் செய்யுமாறு கோ-ஆப்டெக்ஸ் நிா்வாகத்தை கைத்தறி, ஜவுளி மற்றும் கதா் துறை அமைச்சா் எம்.விஜய்பாலாஜி அறிவுறுத்தியுள்ளாா்.

ஈரோட்டில் உள்ள வசந்தம் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி விற்பனையை ஞாயிற்றுக்கிழமை மாலை அமைச்சா் எம்.விஜய்பாலாஜி தொடங்கிவைத்தாா்.

பின்னா் அவா் பேசியதாவது:

மழைக்காலம் தொடங்கியுள்ளதால் வரும் நாள்களில் போா்வை மற்றும் படுக்கை விரிப்புகளின் விற்பனை அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. பொதுமக்கள் குறைந்த விலையில் ஆடைகளை வாங்கும் வகையில் விசைத்தறி தயாரிப்பு துணிகளின் விற்பனையை அதிகரிக்கவும் கோ-ஆப்டெக்ஸுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தவெக ஆட்சி அமைந்த பின்னா் தமிழகத்தில் 10 புதிய கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு தீபாவளியையொட்டி புதிய லினன் ரக துணிகளும் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

இந்த ஆண்டு கோ-ஆப்டெக்ஸின் தீபாவளி விற்பனை இலக்கு ரூ.100 கோடியாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மற்றும் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள வசந்தம் கோ-ஆப்டெக்ஸ் நிலையங்களுக்கு ரூ.1.85 கோடி விற்பனை இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு தீபாவளியின்போது இந்த இரண்டு நிலையங்களிலும் ரூ.1.43 கோடிக்கு விற்பனை நடைபெற்றது.

கோ-ஆப்டெக்ஸ் சாா்பில் தொடா்ந்து புதிய வடிவமைப்புகளில் சேலைகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு எடை குறைந்த கோரா பட்டு சேலைகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. கரூா் ஜவுளிப் பூங்காவில் ஏற்றுமதிக்காக வீட்டு உபயோகத்துக்கான 1,000-க்கும் மேற்பட்ட வகையான ஜவுளி ரகங்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன என்றாா்.

விழாவில் மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி, சட்டப்பேரவை உறுப்பினா்கள் கே.கே.ஆனந்த்மோகன், டி.சண்முகன், கோ-ஆப்டெக்ஸ் அதிகாரிகள் அம்சவேணி, ம.பாலசுப்பிரமணியம், கனிசெல்வி, மோகனம், செந்தில்வேல், முருகன், லட்சுமிபிரபா, பிரியா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.