மின் இணைப்பு பெயர் மாற்றத்துக்காக விண்ணப்பித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் சார்பில் நடைபெற்றது.
கோத்தகிரி நகரம் மற்றும் கிராமிய உட்கோட்டத்தில் உள்ள மின் பயனீட்டாளர்கள், மின் வாரியம் சார்பில் கடந்த ஒரு வார காலம் நடைபெற்ற முகாமில் மின் இணைப்பு பெயர் மாற்ற விண்ணப்பம்
அளிக்கலாம் என தெரிவித்திருந்திருந்தனர். இதில் ஏராளமானவர்கள் உரிய சான்றிதழ்களுடன் பெயர் மாற்றத்துக்கு விண்ணப்பித்திருந்தனர்.
இந்நிலையில் விண்ணப்பித்தவர்களுக்கான சான்றிழ் வழங்கும் நிகழ்ச்சி கோத்தகிரியில் நடைபெற்றது.
அரிமா சங்கத்தின் மூத்த தலைவர் போஜராஜன், குன்னூர் செயற்பொறியாளர் சேகர், உதவி செயற்பொறியாளர் பிரேம்குமார், புளூமவுண்டன் நுகர்வோர் சங்கத் தலைவர் பாலகிருஷ்ணன், செயலாளர் ராஜன், மின் வாரிய முகவர்கள் சின்னசாமி, விஜயன், கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டு சான்றிதழ்
வழங்கினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.