மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தினால் திருப்பித் தாக்க ஒத்திகை

மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தினால் திருப்பித் தாக்குதல் நடத்துவது குறித்த ஒத்திகை நிகழ்ச்சி பந்தலூரை அடுத்துள்ள அம்பலமூலா பகுதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :9 நவம்பர் 2017, 1:12 am

DIN

மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தினால் திருப்பித் தாக்குதல் நடத்துவது குறித்த ஒத்திகை நிகழ்ச்சி பந்தலூரை அடுத்துள்ள அம்பலமூலா பகுதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நீலகிரி மாவட்டம், பந்தலூர் வட்டத்தில் உள்ள கேரள எல்லையோர கிராமம், அம்பலமூலா காவல் நிலையத்தில் மாவட்ட எஸ்.பி.முரளி ரம்பா தலைமையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், எதிர்பாராத விதமாக மாவோயிஸ்டுகள் காவல் நிலையத்தில் நுழைந்து தாக்குதல் நடத்தினால், அதிரடியாக அதை முறியடித்து திருப்பித் தாக்குதல் நடத்துவது குறித்து ஒத்திகை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பந்தலூர் டி.எஸ்.பி.சக்திவேல், அதிரடிப்படை காவலர்கள், நீலகிரி மாவட்ட நக்ஸல் தடுப்புப் பிரிவுக் காவலர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.