மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? காங்கிரஸ் தலைவர் வி.டி. சதீசன் எழுதிய புத்தகம் மே 9-இல் வெளியீடு!தமிழ்நாட்டில் புதிய அரசை அமைக்க எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை: நயினார் நாகேந்திரன்தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!பிளஸ் 2 முடிவுகள் வெளியானது! 95.2% தேர்ச்சி!
/

நீலகிரி வனத் துறையின் அதிவிரைவு  செயல் பிரிவு குழுவுக்கு புதிய வாகனங்கள்

நீலகிரி மாவட்டத்திலுள்ள  வனத்துறையின் அதிவிரைவு செயல் பிரிவு  குழுவினரின் பணிகளுக்காக புதிய வாகனங்கள்  அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

Updated On :18 ஏப்ரல் 2018, 6:54 am IST

நீலகிரி மாவட்டத்திலுள்ள  வனத்துறையின் அதிவிரைவு செயல் பிரிவு  குழுவினரின் பணிகளுக்காக புதிய வாகனங்கள்  அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 
அதிவிரைவு செயல் பிரிவுக் குழுவினர் பணிகளுக்காக  அதி விரைவு வாகனங்கள் 2 வாங்கப்பட்டுள்ளன. இவற்றின் பயன்பாட்டினை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா  செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தார்.
    நீலகிரி மாவட்ட கூடுதல் ஆட்சியர் அலுவலகத்தில் வனத்துறை சார்பாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:
  நீலகிரி மாவட்டத்தில் அதிக அளவு பகுதிகள்  வனப்பகுதியாக  உள்ளன. எனவே,  மனித-  விலங்கு மோதல் மற்றும் பயிர் சேதம் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்க புதிதாக 12 உறுப்பினர்களைக் கொண்ட அதிவிரைவு செயல் பிரிவுக் குழு துவங்கப்பட்டுள்ளது. இதற்காக 0423-2440968 என்ற முழு நேர இலவச தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 
மேலும்,  2 வாகனங்கள் 24 மணி நேரமும் தயார் நிலையில் உள்ளது. எனவே, பொதுமக்கள் மனித, வன விலங்கு மோதல் மற்றும் பயிர் சேதம் போன்ற பாதிப்புகளிலிருந்து தங்களையும்,  தங்களின் விவசாய நிலங்களையும்  இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பாதுகாத்து கொள்ளலாம் என்றார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வன அலுவலர்கள் ராஜ்குமார், கலாநிதி, அரசுத்துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.