காஷ்மீர் சிறுமி படுகொலையைக் கண்டித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் கூடலூரில் ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூடலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மனிதநேய மக்கள் கட்சி நகரச் செயலாளர் சாதிக் பாபு தலைமை வகித்தார். நகரத் தலைவர் அப்துல் காதர் முன்னிலை வகித்தார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி என்.வாசு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் க.சகாதேவன், நாம் தமிழர் கட்சியின் மாவட்டச் செயலாளர் கேதீஸ்வரன், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக ஒன்றியச் செயலாளர் தம்பி ராமசாமி, திமுக ஒன்றியச் செயலாளர் லியாகத் அலி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டு உரையாற்றினர். நிசார் அகமது நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைது!

தீபாவளி வெளியீடாக சூர்யா - 47?

திருச்சி கிழக்கு செல்கிறார் விஜய்! இன்றைய செய்திகள் மே 30 - நேரலை!

ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு
விடியோக்கள்

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


