தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

இரியசீகை கிராமத்தில் முகாமிட்டுள்ள காட்டு யானைகளால் அச்சம்

மஞ்சூர்- இரியசீகை கிராமத்தில் பலாப் பழங்களை ருசிக்க முகாமிட்டுள்ள காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்ட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.  

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 7:52 pm

DIN

மஞ்சூர்-இரியசீகை கிராமத்தில் பலாப் பழங்களை ருசிக்க முகாமிட்டுள்ள காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்ட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. 
மஞ்சூர் அருகே தமிழக- கேரள எல்லையோரத்தில் இரியசீகை கிராமம் உள்ளது. இக்கிராமத்தில்  100-க்கு மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. மேலும் இப்பகுதியில் அடர்ந்த தேயிலைத் தோட்டம் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. 
ஞாயிற்றுக்கிழமை இரவு,  இக் கிராமத்தினுள் 2 காட்டு யானைகள் நுழைந்தன.  முதலில் அப்பகுதியில் காய்த்துள்ள பலாப் பழங்களை காட்டு யானைகள் ருசித்தன. 
அருகிலுள்ள குடியிருப்புப் பகுதிகளை காட்டுயானைகள் நெருங்கியபோது குடியிருப்பு வாசிகள் தீப்பந்தம் காட்டியும், தப்பட்டை அடித்தும் காட்டு யானைகளை விரட்டும் பணியில் விடியவிடிய ஈடுபட்டனர். இவற்றை வனத் துறையினர்  அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.