சென்னையில் பதுக்கி வைத்திருந்த 40 சிலிண்டா்கள் பறிமுதல்!புனேவில் 4 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற முதியவர்!மணிப்பூரில் 23 சட்டவிரோத பதுங்கு குழிகளை அழித்த பாதுகாப்புப் படையினர்!தேர்தல் முடிவுகள் வெளியாகும் நேரத்தில் பேசுபொருளாகும் ஜோதிமணி ட்வீட்!கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புமேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

கைகாட்டி பஜாரில் எரியாத தெரு விளக்கு: முறையிட்டும் நடவடிக்கை இல்லை என புகார்

மஞ்சூர் அருகே கைகாட்டி பஜார் பகுதியில் இரவு நேரத்தில் தெரு விளக்குகள் எரியாததால் பொதுமக்கள் பெரும் அவதியுற்று வருகின்றனர்.

Updated On :21 மே 2018, 7:14 pm

மஞ்சூர் அருகே கைகாட்டி பஜார் பகுதியில் இரவு நேரத்தில் தெரு விளக்குகள் எரியாததால் பொதுமக்கள் பெரும் அவதியுற்று வருகின்றனர்.
மஞ்சூர் அருகே கைகாட்டி பஜார் பகுதி ஆருக்குச்சி, அறையட்டி, மேலூர், மஞ்சக்கம்பை, நெடுகல் கம்பை, ஆலட்டனை உள்ளிட்ட கிராமங்கள் மட்டுமல்லாமல் குந்தா, மஞ்சூர், கிண்ணக்கொரை, தேவர்சோலா, பெங்கால் மட்டம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு மையப்பகுதியாக உள்ளது. இதோடு ஊட்டி, குன்னூர் பகுதியில் இருந்து இயக்கப்படும் அரசு பேருந்துகள் இங்கு தான் பயணிகளை ஏற்றி இறக்கிச் செல்கின்றன.
இப்பகுதி அடர்ந்த தேயிலைத் தோட்டம், அடர்ந்த வனப் பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இதனால் இரவு நேரத்தில் கரடி, காட்டெருமை, காட்டுப்பன்றி, சிறுத்தை உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் இங்கு நடமாடி வருவது தொடர்கதையாக உள்ளது.
இந்நிலையில் பஜார் பகுதியில் கடந்த 2 மாதங்களாக தெருவிளக்குகள் எரியாமல் உள்ளது. இப்பிரச்னை குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் இப்பகுதி மக்கள் யாரிடம் முறையிடுவது என்று தெரியாமல் தவித்துவருகின்றனர்.
இதுகுறித்து முன்னாள் கவுன்சிலர் ராஜபிரதாப் கூறுகையில், கைகாட்டி பஜார் பகுதி 20க்கு மேற்ப்பட்ட கிராமங்களுக்கு மையப்பகுதியாக உள்ளது.
மேலும் இப்பகுதி பாலகொலா, மேலூர் ஆகிய ஊராட்சிகளின் மையப்பகுதியாகவும் உள்ளது. இரவு நேரத்தில் தெருவிளக்கு எரியாததால் பொதுமக்கள் வன விலங்குகளால் தாக்கப்படும் நிலை உள்ளது. உடனடியாக இதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.