சென்னையில் பதுக்கி வைத்திருந்த 40 சிலிண்டா்கள் பறிமுதல்!புனேவில் 4 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற முதியவர்!மணிப்பூரில் 23 சட்டவிரோத பதுங்கு குழிகளை அழித்த பாதுகாப்புப் படையினர்!தேர்தல் முடிவுகள் வெளியாகும் நேரத்தில் பேசுபொருளாகும் ஜோதிமணி ட்வீட்!கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புமேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

ரெப்கோ வங்கி சார்பில் வெள்ள நிவாரண உதவி

கேரளத்தின் வயநாடு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தோட்டத் தொழிலாளர்களுக்கு நிவாரணப் பொருள்கள் ரெப்கோ வங்கி சார்பில்  திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

Updated On :3 செப்டம்பர் 2018, 7:45 pm

கேரளத்தின் வயநாடு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தோட்டத் தொழிலாளர்களுக்கு நிவாரணப் பொருள்கள் ரெப்கோ வங்கி சார்பில்  திங்கள்கிழமை வழங்கப்பட்டன.
கடந்த மாதம் கேரள மாநிலத்தில் பெய்த கடும் மழையால் பல இடங்கள் பாதிக்கப்பட்டன. இதில் வயநாடு மாவட்டத்தின் மானந்தவாடி பகுதியில் கம்பமலை மறுவாழ்வுத் திட்டத்தின் கீழ் செயல்படும் கேரள அரசுக்குச் சொந்தமான எஸ்டேட் சாலையும் பாலங்களும் அடித்துச் செல்லப்பட்டதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. 
இதனால் அப்பகுதிக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்காத நிலை ஏற்பட்டது.
ரெப்கோ வங்கியின் இயக்குநர்கள் மகாலிங்கம், முனீஸ்வர் கணேசன் ஆகியோரின் பரிந்துரைப்படி,  வங்கின் நிர்வாக இயக்குநர் இசபெல்லா, கம்பமலை எஸ்டேட்டில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்க உத்தரவிட்டார்.
அதன்படி, பந்தலூர் ரெப்கோ வங்கி மேலாளர் பாலாஜி, கூடலூர் ரெப்கோ வங்கியின் உதவி மேலாளர் ஸ்வஸ்திக், பணியாளர்கள் சந்திரசேகர், பாலமுருகன் ஆகியோருடன் ரெப்கோ வங்கி டெலிகேட்ஸ் யூனியனின் தென்னிந்திய தலைவர் சு.ஆனந்தராஜ், துணைத் தலைவர் கு.கிருஷ்ணபாரதியார் ஆகியோர் சம்பந்தப்பட்ட எஸ்டேட்டுக்குச் சென்று தொழிலாளர்களைச் சந்தித்து, 120 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்கினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.