குன்னூர்: கோவையில் இருந்து உதகைக்கு சுற்றுலா வந்த வேன் விபத்துக்குள்ளானதில் இருவர் ஞாயிற்றுக்கிழமை படுகாயடைந்தனர். மற்றவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது.
கோவை, ராஜவீதியில் உள்ள தனியார் சூட்கேஷ் தயாரிக்கும் நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் 20 பேர் வேனில் உதகைக்கு சுற்றுலா வந்துள்ளனர். இவர்கள், ஊர் திரும்பும் வழியில் குன்னூர்- மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் கே.என்.ஆர். பகுதியில் வேன் நிலைத்தடுமாறி பள்ளத்தில் விழுந்தது. இவ்விபத்தில், வேனில் பயணித்த 20 பேரில் 11 பேர் காயடைந்தனர்.
இதில், முகமது அனாஸ் (16) , சதாம் (27 ஆகியோருக்கு கை, கால் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மற்றவர்கள் லேசான காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் குன்னூர் அரசு லாலி மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வேன் ஓட்டுநர் சரவணகுமாரிடம் நடைபெற்ற விசாரணையில், சுற்றுலா வந்த அனைவரும் கோவையில் தங்கி பணிபுரியும் உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சட்டவிரோத கைத்துப்பாக்கியுடன் சோயா சாப் விற்பனையாளா் கைது
நன்றியுணர்வால் மனதை நிரப்புங்கள்!

11.5.1976: ஹிந்தி எதிர்ப்பு பென்ஷன் திட்டம் நிறுத்தப்பட்டது
நாளைய மின்தடை குடவாசல்
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை
