எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

பந்தலூர் அருகே  சிறுத்தையை கூண்டுவைத்து பிடிக்கக் கோரிக்கை

பந்தலூர் அருகே சனிக்கிழமை இரவு 2 ஆடுகளை கொன்ற சிறுத்தையை கூண்டுவைத்துப் பிடிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Updated On :25 பிப்ரவரி 2019, 10:30 am IST



கூடலூர்: பந்தலூர் அருகே சனிக்கிழமை இரவு 2 ஆடுகளை கொன்ற சிறுத்தையை கூண்டுவைத்துப் பிடிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
  பந்தலூர் வட்டத்திலுள்ள நெல்லியாளம் பகுதியிலுள்ள நாரங்காவயல் கிராமத்துக்குள் புகுந்த சிறுத்தை அப்பகுதியைச் சேர்ந்த விஜயன் என்பவரது இரண்டு ஆடுகளை கொன்றுள்ளது. இது குறித்து வனத் துறைக்குத் தகவல் கொடுக்கப்பட்டது.  வனச் சரக அலுவலர் மனோகரன் சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்தார். பந்தலூர் கால்நடை மருத்துவர் பாலாஜி இறந்த ஆடுகளுக்கு பிரேதப் பரிசோதனை செய்தார். ஆடுகளை கொன்ற சிறுத்தையை கூண்டு வைத்துப் பிடித்து வனப் பகுதியில் விடவேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.