மாவட்டச் செயலர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு! ஒரே வாரத்தில் 2-வது முறை!ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

உதகையில் ஜாக்டோ-ஜியோ ஆர்ப்பாட்டம்: 60% ஊழியர்கள் பணிக்குச் செல்லவில்லை

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை

Updated On :23 ஜனவரி 2019, 5:33 am IST

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி உதகையில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
உதகையில்,  மாவட்ட  ஆட்சியர் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு ஜாக்டோ அமைப்பின் சார்பில் அண்ணாதுரை, பிராங்ளின் ஆகியோரும்,  ஜியோ அமைப்பின் சார்பில் சுப்பிரமணி, குமாரராஜா ஆகியோரும் தலைமையேற்றனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.
ஜாக்டோ- ஜியோ சார்பில் அமைப்பாளர் ஸாகிரா கூறியதாவது: ஜாக்டோ-ஜியோ அமைப்பின் சார்பில் நடைபெறும் தொடர் போராட்டம் காரணமாக செவ்வாய்க்கிழமை நீலகிரி மாவட்டத்தில்  60 சதவீத ஊழியர்கள் பணிக்குச் செல்லவில்லை.  உதகையில்  ஊரக வளர்ச்சித் துறையில் 95 %, வேலைவாய்ப்புத் துறையில் 100%  ஊழியர்கள் பணிக்குச் செல்லவில்லை. செவ்வாய்க்கிழமை உதகை, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் ஆகிய 4 இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. புதன்கிழமை உதகையில் ஏடிசி சுதந்திர சதுக்கப் பகுதியில் மறியல் போராட்டம் நடைபெறும். அதைத் தொடர்ந்து வியாழக்கிழமை உதகையில் மத்தியப் பேருந்து நிலையம் எதிரிலும்,  25 ஆம் தேதி வெள்ளிக்கிழமை உதகையில் சேரிங்கிராஸ் பகுதியிலும் மறியல் போராட்டம் நடைபெறும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.