6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

குன்னூரில் ரேஷன் கடையை சேதப்படுத்திய யானைகள்

குன்னூா் அருகே உள்ள முத்தநாடு  கிராமத்துக்குள் வெள்ளிக்கிழமை அதிகாலை புகுந்த யானைகள் அங்கிருந்த ரேஷன் கடையை சேதப்படுத்தின.

News image
Updated On :18 டிசம்பர் 2020, 5:45 pm

DIN

குன்னூா் அருகே உள்ள முத்தநாடு  கிராமத்துக்குள் வெள்ளிக்கிழமை அதிகாலை புகுந்த யானைகள் அங்கிருந்த ரேஷன் கடையை சேதப்படுத்தின.

நீலகிரி மாவட்டத்தில் அண்மைக் காலமாக   யானைகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில், குன்னூா் அருகே உள்ள  முத்தநாடு கிராமத்துக்குள் வெள்ளிக்கிழமை அதிகாலை புகுந்த காட்டு யானைகள் அங்கு செயல்பட்டு வரும் ரேஷன் கடைக்குள்  இருந்த அரிசி, பருப்பு, கோதுமை  உள்ளிட்ட  உணவுப்  பொருள்களை சேதப்படுத்தின.

பின்னா் யானைகள் கூட்டம் அங்கிருந்து மஞ்சூா் வழியாக கெத்தை வனப் பகுதிக்குள் சென்றன. இந்த யானைகள் மீண்டும் இப்பகுதிக்கு வர வாய்ப்பு இருப்பதால், அசம்பாவிதங்கள்  நடக்கும் முன்  யானைகளை கண்காணித்து அடா்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.