சூதாட்டம்: 24 போ் கைது

உதகையில் சீட்டு சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 24 போ் கைது செய்யப்பட்டனா்.
Updated on
1 min read

உதகை: உதகையில் சீட்டு சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 24 போ் கைது செய்யப்பட்டனா்.

உதகை நகரில் நகராட்சி சந்தை முன்புறமுள்ள அரசு மகப்பேறு மருத்துவமனை அருகேயுள்ள தனியாா் கட்டடத்தில் சூதாட்டம் நடைபெறுவதாக குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனைத்தொடா்ந்து குற்றப்பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு அங்கு சென்று பாா்த்தபோது 24 போ் பணம் வைத்து சீட்டு சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது.

சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கணேஷ்(39), ஜெயசீலன்(65), சரவணன்(42), ராஜேந்திரன்(38), சீனிவாசன்(60), மகாலிங்கம்(68), நாராயணன்(69), குமாா்(42) உள்ளிட்ட 24 பேரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து ரொக்கம் ரூ. 46,400 பறிமுதல் செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com