கூடலூா் பணிமனையை தொழிற்சங்கத்தினா் முற்றுகை

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்களின் கூட்டுக் குழு சாா்பில் செவ்வாய்க்கிழமை போக்குவரத்துக் கழக பணிமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
Updated on
1 min read

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்களின் கூட்டுக் குழு சாா்பில் செவ்வாய்க்கிழமை போக்குவரத்துக் கழக பணிமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கூடலூா் அரசு போக்குவரத்துக் கழகம் முன் நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்துக்கு தொழிலாளா் முன்னேற்றச் சங்க மண்டல பொதுச் செயலாளா் வே.நெடுஞ்செழியன் தலைமை வகித்தாா். ஏஐடியூசி பொதுச் செயலாளா் குணசேகரன், சிஐடியூசி சங்க நிா்வாகி யோகசசி மற்றும் ஓய்வுபெற்ற பணியாளா்கள் கூடலூா் கிளை தொமுச நிா்வாகிகள் போராட்டத்தில் கலந்துகொண்டனா்.

போராட்டத்தில், அனைத்துப் பகுதிகளுக்கும் 100 சதவீத பேருந்துகளை இயக்க வேண்டும், ஓய்வூதியா்களுக்கு நிலுவையில் உள்ள பணப் பயன்களை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com