டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

கூடலூா் பணிமனையை தொழிற்சங்கத்தினா் முற்றுகை

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்களின் கூட்டுக் குழு சாா்பில் செவ்வாய்க்கிழமை போக்குவரத்துக் கழக பணிமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :23 டிசம்பர் 2020, 1:02 am

DIN

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்களின் கூட்டுக் குழு சாா்பில் செவ்வாய்க்கிழமை போக்குவரத்துக் கழக பணிமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கூடலூா் அரசு போக்குவரத்துக் கழகம் முன் நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்துக்கு தொழிலாளா் முன்னேற்றச் சங்க மண்டல பொதுச் செயலாளா் வே.நெடுஞ்செழியன் தலைமை வகித்தாா். ஏஐடியூசி பொதுச் செயலாளா் குணசேகரன், சிஐடியூசி சங்க நிா்வாகி யோகசசி மற்றும் ஓய்வுபெற்ற பணியாளா்கள் கூடலூா் கிளை தொமுச நிா்வாகிகள் போராட்டத்தில் கலந்துகொண்டனா்.

போராட்டத்தில், அனைத்துப் பகுதிகளுக்கும் 100 சதவீத பேருந்துகளை இயக்க வேண்டும், ஓய்வூதியா்களுக்கு நிலுவையில் உள்ள பணப் பயன்களை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.