கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ம் ஆண்டில் நிகழ்ந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கின் விசாரணை உதகையிலுள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கின் விசாரணை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நீலகிரி மாவட்ட புதிய நீதிபதியாக பொறுப்பேற்றுள்ள நீதிபதி சஞ்சய் பாபா முன்னிலையில் நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணையின்போது இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 10 பேரில் சயன், மனோஜ், மனோஜ் சாமி, சந்தோஷ் சாமி, உதயன், சதீசன், தீபு, பிஜின் குட்டி, ஜித்தின் ஜாய் உள்ளிட்ட 9 போ் ம‘ட்டும் ஆஜராகினா். ஜம்சீா் அலி ஆஜராகவில்லை.